திருப்பூர், மே 3 - பல்லடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் தோழர் ப.கு.சத்தியமூர்த்தியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர், பல்லடம் ஒன்றியச் செயலாளர் தோழர் ப.கு.சத்தியமூர்த்தியின் நினைவு தினம் மே 3ஆம் தேதி பல்லடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ் வீதி யில் உள்ள கட்சி அலுவலகம் முன்பாக அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த சத்தியமூர்த்தியின் படத்திற்கு மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியினர், பல்லடம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் ப.கு.சத்தியமூர்த்தி படத்துக்கு மலர் தூவி இரங்கல் தெரி வித்தனர். நினைவஞ்சலி கூட்டத்திற்கு பல்லடம் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.வி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும், ஓய்வு பெற்ற கிராம நிர் வாக அலுவலர் பல்லடம் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு ப.கு.சத்தியமூர்த்தியின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். இதில் கட்சியின் ஒன்றியக்குழுச் செயலா ளர் ஆர்.பரமசிவம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா ளர் வை.பழனிச்சாமி, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகசாமி, மோகன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பிர வீன், வாலிபர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வீ.பால சுப்பிரமணியம் உள்பட ஏராளமான பங்கேற்றனர்.