சேலம், நவ.10- உலக அமைதியை வலியுறுத்தி பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் ஹோலி கிராஸ் பள்ளியில் 1500 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட ஓவியப்போட்டி நடைபெற்றது. உலக அமைதி பெற பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் சேலம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஓவியப் போட்டியில் பங் கேற்றனர். “இரக்கத்துடன் வழி நடத்துங்கள்” என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் ஓவியத்தை வரைந்தனர். 11, 12, 13 வயதில் நிரம்பிய பள்ளி குழந்தைகள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களின் 24 ஓவி யங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசும், 23 ஓவியங்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட உள்ளது. சேலம் மாவட் டத்திலுள்ள 5 வருவாய் மாவட்டங் களிலும் தனித்தனியே மாவட்ட வாரி யாக இந்த ஓவியப்போட்டி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் கே.ஆர்.முத்தையா, டி.ஆர்.தமிழ்மணி, செந்தில்குமார், மாவட்ட தலைவர் எம். விஜயன், எஸ்.எம்கோ சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.