நீலகிரி, ஏப்.28- நீலகிரி அருகே வளர்ப்பு யானை தாக்கி பாகன் பலி யான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. நீலகிரி மாவட்டம், முது மலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இதில் தெப்பக் காடு, அபயராண்யம் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை அங்கு வசித்து வரக் கூடிய பாகன்கள் பராமரித்து வருகின்றன. காலை, மாலை என இரு வேளைகளிலும் யானைக்கு ராகி, ஊட்டச்சத்து தானியங்கள் நிறைந்த உணவினை உருண்டையாக உருட்டி கொடுத்து வருகின்றனர். இதுமட்டு மின்றி யானைகளை நடைபயிற்சி அழைத்து செல்வது, மேய்ச்சலுக்கு அழைத்து செல் வது என பல்வேறு பணிகளில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற வளர்ப்பு யானை பராமரிக்கப் பட்டு வருகிறது. இந்த யானையை பாகன் பாலன் (54) என்பவர் பராமரித்து வந்தார். இவர் கடந்த பல வருடங்களாக இந்த யானையை பராமரித்தார். இவர் தினமும் காலையில் அந்த யானைக்கு, ராகி, ஊட்டச் சத்து நிறைந்த தானியங்களை உணவாக கொடுப்பார். பின்னர் அந்த யானையை அங் குள்ள பகுதியில் சிறிது நேரம் நடை பயிற்சிக்கு அழைத்து செல்வார். பின்னர் மீண்டும் முகாமுக்கு அழைத்து வருவது வழக்கம். அதன்படி வெள்ளியன்று காலை பாகன் பாலன் மசினி யானைக்கான உணவினை எடுத்து கொண்டு மசினி யானையின் அருகே சென்றார். பின்னர் அந்த யானைக்கு உணவை கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மசினி யானை பாகனை தாக்கி விட்டது. இதில் பாகன் பாலன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த சக பாகன்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காயமடைந்த பாலனை மீட்டு வனத்துறை வாகனத்தில் கூடலூர் மருத்துவ மனைக்கு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பாகன் பாலன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து உடல் கூறாய்வுக்காக கூட லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத் தையும், சோகத்தையும் ஏற்படுத்தி[யள்ளது.