கோவை, மே 4- நலவாரிய உறுப்பினர்கள், சுய தொழில் புரிபவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை, பெரிய நாயக்கன்பாளையத் தில் சிஐடியு சார்பில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் பங்கேற்று நலத்திட்ட உதவி களை வழங்கினார். பெரியநாயக்கன்பாளையம் பேரூ ராட்சிக்குட்பட்ட ஜடால் நாயுடு வீதி சக்தி நகர் கலையரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் பெரிய நாயக்கன்பாளையம் பேரூராட்சி 8 ஆவது வார்டு கவுன்சிலர் எம்.சிவராஜன் நிகழ்விற்கு தலைமை ஏற்றார். கோவை மாவட்ட வடக்கு பொதுத்தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடை பெற்ற இவ்விழாவில், சுயதொழில் புரிபவர்களுக்கான நலவாரிய அட்டை, ஓய்வு பெற்ற 60 வயதிற்கு மேற்பட்ட நலவாரிய உறுப்பினர்களுக்கு பெறப் பட்ட ஓய்வூதிய உத்தரவுகளை வழங்கு தல், மற்றும் புலம் பெயர்ந்த தொழிலா ளர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு உத்தரவுகள் 25 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நலத்திட்ட உதவிகளை, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று பயனாளி களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய்குமார், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் என்.பாலமூர்த்தி, ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி.தேவராஜ், மா.கோகுலகிருஷ்ணன், ஜே.சிவ சங்கரன் மற்றும் பொதுத்தொழி லாளர்கள் சங்கத்தின் இடைக்குழு உறுப்பினர்கள் ரேணுகா தேவி, வெங்க டசாமி, மாதர் சங்கத்தின் நிர்வாகி லதா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். இந்த நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வருடமும் மே தினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு பொதுத்தொழி லாளர் சங்கம் இணைந்து இத்தகைய பணிகளை மேற்கொண்டு வருவது, பொதுமக்களிடையே செங்கொடி இயக்கத்தின் மீதான பிணைப்பு அதி கரித்து வருவது குறிப்பிடத்தக்கது. முடிவில், சிபிஎம் கிளை செயலாளர் கருப்புசாமி நன்றி கூறினார்.