districts

வாகன உரிமையாளருக்கு இழப்பீடு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவு

நாமக்கல், ஜூன் 13- யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆழ்குழாய் வாகன உரிமையாளருக்கு ரூ.3.27 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள  அகரம் கிராமத்தில் வசித்து வருபவர் தேவராஜன் (42). இவர் சொந்தமாக ஆழ்குழாய் அமைக்கும் வாகனங்களை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 2016 அக்டோபர் மாதம் மத்திய பிரதேசத்தில் இவரின் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் லாரி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து மத்தியபிரதேச மாநி லம், சாய்ம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. விபத்துக்குள்ளான வாகனத்திற்கு இழப்பீடு கேட்டு,  அவர் இன்சூரன்ஸ் செய்திருந்த யுனைடெட் இந்தியா இன்சூ ரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனமோ, அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதால் இழப் பீடு தர முடியாது என தெரிவித்துள்ளது. இதனால், வாகன உரி மையாளர் இழப்பீடு கேட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முறையீடு செய்தி ருந்தார். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் 13-06-23 உறுப்பினர் ஏ.எஸ்..ரத்தினசாமி முன்னிலை யில் நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். இதில், முதல் தகவல் அறிக்கையில் அனுமதிக்கப்பட்ட மூன்று நபர்க ளுக்கு பதிலாக ஐந்து நபர்களை வாகனத்தில் அழைத்துச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையின் விசாரணையில் அதிக நபர்களை அழைத்துச் சென்றதாக குற் றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், இன்சூ ரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க முடியாது என கூறுவது சேவை குறைபாடு என்றும், கூடுதலாக இரண்டு நபர்களை அழைத்துச் சென்றதால் தான் விபத்து நடந்தது என்று இன்சூ ரன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிரூபிக்கவில்லை என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  இதனால், ரூ.25,972 பிரிமியம் செலுத்தி காப்பீடு செய்து  விபத்துக்கு உள்ளான ஆழ்குழாய் வாகன உரிமையாளருக்கு வாகனத்தை பழுது நீக்க ஏற்பட்ட செலவு ரூ.2 லட்சத்து 77 ஆயி ரத்தை 2016 முதல் 6 சதவிகித வட்டியுடன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் 50 ஆயிரத்தை நான்கு  வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் இந்த உத்தர வில் குறிப்பிடப்பட்டுள்ளது.