தருமபுரி, ஆக.21- தருமபுரியில் சுகாதாரமற்ற முறை யில் செயல்பட்டு வந்த குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் என தெரிவித்து, உணவு பாதுகாப்புத் துறையினர் உத்தரவிட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியரின் அறி வுறுத்தலின்பேரில், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஏ.பானுசுஜாதா தலைமையில், ஒன் றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் மற்றும் கந்த சாமி உள்ளிட்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். அதன்ஒருபகுதியாக, தரும புரி நகராட்சிக்குட்பட்ட பாபா சாகிப் தெரு, ஏ.கொல்லள்ளி, அன்னசாகரம், தடங்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் உள்ளூர் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களில் புதனன்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது ஏ.கொல்லள்ளி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல் பட்டு வந்த சோடா கம்பெனி தொடர்ந்து இயங்க தடை விதித்து, உரிய ஆய்வு, அனுமதிக்குப்பின் குளிர்பானங்கள் விற்பனை செய்ய நோட்டீஸ் வழங்கப் பட்டு, நிறுவனம் மூடப்பட்டது. இதேபோல், தடங்கம், ஆட்சியர் பங் களா சாலையில் குமரகிரி மில் அருகே இயங்கி வரும் பாதாம் பால் உள்ளிட்ட குளிர்பான தயாரிப்பு நிறுவனம் உப கரணங்கள் துருப்பிடிக்க ஏதுவாகவும், தயாரிப்பு கூடம் உரிய சுகாதாரமற்று காணப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தை உடனடியாக மூடச் செய்து, ஏழு தினங்களுக்குள் மேற்படி குறைபாடுகளை களைந்து, ஆய்வுக்கு பின் அனுமதித்தயளித்த பிறகு தயாரிப் புப் பணியை செய்ய வேண்டும் என தெரி வித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.