districts

img

தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட ஆணை

நாமக்கல், ஆக.14- சின்னாகவுண்டம்பாளையம் பகு தியில் தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடு அமைப்பதற்கு உத்த ரவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், சின்னா கவுண்டம்பாளையம் பகுதியில் தீ  விபத்து ஏற்பட்டு ஆறு விடுகள் எரிந்து சேதமானது. இதனையடுத்து வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தீ விபத்தினால் வீடுகள் முழுவதும் சேத மடைந்த 4 குடும்பத்தினருக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் தற்காலிக வீடு கள் அமைப்பதற்கான உத்தரவுக ளையும், வீட்டின் முன்புறம் உள்ள  கீற்றுக் கொட்டகை சேதம் அடைந்த  குடும்பத்தினருக்கு பராமரிப்பு பணி கள் மேற்கொள்ள தலா ரூ.25 ஆயி ரம், பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக் கும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு  உபயோகப் பொருட்கள்,

தீ விபத்தி னால் சேதமடைந்த பட்டா, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவைகளையும் அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கி, ஆறுதல் கூறினார். இதன்பின்னர் அமைச்சர் மா.மதி வேந்தன் கூறுகையில், ஆலாம்பா ளையம் பேரூராட்சிக்குட்பட்ட சின் னாகவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த ஆக.11 ஆம்தேதி எதிர்பாரத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், 6 வீடுகள் சேதமடைந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வீடுகளில் யாரும் இல்லாத காரணத்தால் பெரிய ஆபத்து ஏற்படவில்லை.  சேதமடைந்த இடங்களை பார்வை யிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு, குக் கர், குடம், அரிசி, காய்கறிகள் உள் ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வீடு கட்டுவதற்கு நாடாளுமன்ற மாநி லங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.3லட்சம் வழங்கியுள்ளார். மேலும், ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.1.50 லட்சம் என  மொத்தம் ரூ.4.50 லட்சம் வழங்கியுள் ளார்கள். மேலும், வீடு கட்டும் வரை  பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு தங்குமிடம், உணவு பொருட்கள், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் வழங்கப்பட் டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார் பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாக வும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும், என்றார்.