districts

img

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு

சேலம், செப்.1- எட்டு வழிச்சாலை திட் டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் - சென்னை இடை யிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் எட்டு  வழிச்சாலை திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் ரூ.10 ஆயிரம் கோடி  மதிப்பில் இந்த நடைமுறைப்படுத்தப்பட உள் ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற் கான நிலங்களை எடுப்பதற்கு விவசாயிக ளின் நலன்களைப்பற்றி கவலை கொள்ளாம லும், எவ்வித கருத்துக்களையும் கேட்காம லும் சர்வாதிகரத்தனமாக அன்றைய அதிமுக  அரசு திட்டத்தை செயல்படுத்த முனைந்தது. இதற்கெதிராக விவசாயிகள் மற்றுமின்றி  அனைத்து தரப்பினரும் பெரும் போராட் டத்தை முன்னெடுத்தனர். நீதிமன்றமும் தலை யீடு செலுத்தியது. இதனையடுத்து இத்திட் டம் செயல்படுத்தாமல் நிறுத்திவைக்கப்பட் டது. இந்நிலையில் மீண்டும் இத்திட்டம் செயல் படுத்தப்படும் என்கிற ஊகங்கள் வெளிவரத் துவங்கியுள்ளது. இதனையடுத்து வீரபாண்டி அருகே உள்ள பூலாவரியில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது எட்டு வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.