districts

img

நிழற்குடை மாற்றி அமைக்க எதிர்ப்பு

கோபி, பிப்.15- கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையில் ஏற்கனவே இருந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டி  பொதுமக்கள் திரண்டனர். இதனையடுத்து, பழைய இடத்தி லேயே நிழற்குடை அமைக்க உறுதி அளித்தததால் அனை வரும் கலைந்து சென்றனர்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் சாலை விரிவாக்கத்தின்போது அங்கிருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பணிகள் நிறைவுற்று பேருந்து நிறுத்த பயணி கள் நிழற்குடைகள் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அங்குள்ள ஒருவர் தனது சுற்றுசுவருக்கு அருகே  பயணிகள் நிழற்குடை வருவதாக சொல்லி எதிர்ப்பு தெரிவித் ததாக கூறப்படுகிறது. இதனால், பயணிகள் நிழற்குடையை வேறு இடத்திற்கு  மாற்றி அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அப்ப குதி மக்கள் பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்காமல் மாற்று  இடத்தில் அமைத்தால் பள்ளி மாணவர்கள், வயதான வர்கள், நோயாளிகள் அவதி அடைவார்கள் எனவும், தனி நபர் ஒருவரின் எதிர்ப்புக்காக பேருந்து நிறுத்தத்தையே மாற்றி அமைப்பதா எனவும் கேள்வி எழுப்பினர். மேலும்,  ஏற்கனவே இருந்த இடத்திற்கு அருகாமையில் பயணிகள்  நிழற்குடையை அமைக்க வேண்டும் எனக் கூறி பொது மக்கள் திரண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது  இதனையடுத்து, பொம்மநாயக்கன்பாளையம் ஊராட் சித் தலைவர் பச்சியம்மாள் சண்முத்தரசு தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி, ஏற்கனவே இருந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  அனைவரும் கலைந்து சென்றனர்.