districts

திருப்பூர் மாநகராட்சியுடன் பழங்கரையை இணைக்க எதிர்ப்பு

அவிநாசி, ஜூன் 9- பழங்கரை ஊராட்சியை, திருப் பூர் மாநகராட்சியுடன் இணைப்ப தாக அறிவிப்பு வெளியான நிலை யில், இந்த முடிவிற்கு அப்பகுதி  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி  ஒன்றியம் பழங்கரை ஊராட்சியில்  சுமார் 18 ஆயிரம் வாக்காளர்கள், 7  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியி ருப்புகள், 100க்கும் மேற்பட்ட பனி யன் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வரு கின்றன. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம், தலைமை தபால் நிலையம் போன் றவை மிக அருகாமையில் உள் ளன. ஊராட்சி அளவில் 12 வார்டு  உறுப்பினர்கள், இரண்டு ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். திருப் பூர் மாநகராட்சிக்கும், பழங்கரை ஊராட்சிக்கும் தொலைதூரமானது 15 கிலோமீட்டர் ஆக உள்ளது. பச்சாம்பளையம், பெரியாயி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலரும் விவசாயம் செய்து வருகின் றனர். மேலும், கால்நடை வளர்ப்பி லும் ஈடுபட்டு வருகின்றனர். போக்கு வரத்து வசதி என்றால் அவிநாசி புதிய பேருந்து நிலையம், அவிநா சிலிங்கம்பாளையம் போன்ற இடங் கள் உள்ளன. சுமார் 15 வருடங்க ளுக்கு முன்பிருந்தே பழங்க ரையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பலரும்  கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, பழங்கரை ஊராட்சியை, திருமுருகன்பூண்டி நகராட்சியுடன் இணைக்க முயன்ற போது, கடும் எதிர்ப்பு கிளம்பியது.  கருத்துக்கேட்பு கூட்டத்தின் முடி வில், இந்த முயற்சி கைவிடப்பட் டது. மேலும் அவிநாசி சிறப்பு நிலை  பேரூராட்சியாக செயல்பட்டு வரு வதை நகராட்சியாக தரம் உயர்த் தும்போது, பழங்கரை ஊராட்சியை  இணைப்பதுதான் அப்பகுதி பொது மக்களில் வலுவான கருத்தாக இருந்து வருகிறது. தற்பொழுது ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம், திருப்பூர் மாநகராட்சியுடன் பழங்க ரையை இணைப்பது குறித்து கடி தம் அனுப்பப்பட்டதாக தெரிய வரு கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த  அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி  அளவில் ஜூன் 10 அல்லது 11 ஆகிய  தேதிகளில் அனைத்து கட்சி நிர்வா கிகள், பொதுமக்கள் அடங்கிய  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள னர். இதில் முக்கியமான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டு, மாவட்ட நிர்வா கத்திற்கு அனுப்ப உள்ளதாக கூறப் படுகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பழங்கரையை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால், 100 நாள் வேலை திட்டம் பறிபோகும். வரு வாய் பதிவேடு முதல் பத்திரப்பதி வுத்துறை வரை மாநகராட்சிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உரு வாகும். சொத்துவரி முதல் குடிநீர் கட்டணம் வரி வரை அதிகரிக்கச் செய்யும். விவசாயம் பொய்த்து போகும் சூழ்நிலையில், ஊராட்சி அளவில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வந்தால், வரி என்பது குறைவாக இருந்து வருகிறது. இதுபோன்ற சலுகைகள் தற்போது  வரை நடைமுறையில் இருந்து வரு கிறது. பழங்கரை ஊராட்சியை பொறுத்த வரை அதிகாரிகள் தொடர்ச்சியாக தவறான ஆலோச னைகளை அளித்து வருகின்றனர். அவிநாசி பேரூராட்சியை நகராட்சி யாக தரம் உயர்த்தி, நகராட்சியு டன் பழங்கரை ஊராட்சியை இணைப்பது என்பதே பொருத்த மாக இருக்கும் என்பது எங்களின் கோரிக்கையாகும், என்றனர்.