அவிநாசி, டிச.21- பெருமாநல்லூரில் பள்ளிகள் அருகில் மின்மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருமாநல்லூர் ஊராட்சி, பாலசமுத்திரம் அருகே 3000 சதுர அடியில் ரூ. 2 கோடி மதிப்பில் மின் மயானம் அமைப்பதற் கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து செவ்வாயன்று காலை அப்பகுதியில் அள வீடு செய்யும் பணி நடைபெற்றது. இதை அறிந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் மயானம் கட்டப்படவுள்ள இடத்துக்கு அருகில் அரசு மேல் நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், மின் மயானத்துக்கு அருகில் நீர்வழிப்பாதையும், தடுப்பணையும் உள்ளன. ஆகவே, பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக மின் மயானம் அமையக்கூடாது என்றனர். சம் பவ இடத்திற்கு வந்த வருவாய்துறையினர், போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இது, அரசால் தேர்வு செய்யப் பட்ட திட்டம். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொது மக்கள் தெரியப்படுத்தலாம் எனக் கூறினர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம். ஆகவே மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண் டும். திட்டம் தொடர்ந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.