ஈரோடு, டிச. 25- காலிங்கராயன் வாய்க்காலிருந்து திங்க ளன்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட் டது. ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் வாய்க் காலில் இருந்து வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச் சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தீண்ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பி னர் அந்தியூர் ப.செல்வராஜ் மற்றும் திருச் செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வின்போது, அமைச்சர் சு.முத் துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், பவானிசாகர் அணையிலிருந்து பழைய பாசன பகுதிகளான காலிங்கராயன் வாய்க் கால் பாசன பகுதிகளுக்கு அணையில் உள்ள நீர் இருப்பு, பருவமழை மூலம் எதிர்பார்க் கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாசனத் திற்காக இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம், பவானி சாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இதில் முதல் 30 நாட்களுக்கு நாளொன் றுக்கு வினாடிக்கு 150 கன அடி வீதமும், அடுத்த 60 நாட்களுக்கு வினாடிக்கு 450 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படும். மீத முள்ள 30 நாட்களுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். ஆக மொத்தம் 120 நாட்களுக்கு இரண்டாம் பருவ பாசனத்திற்கு 4017.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல், நீர் இருப்பு மற்றும் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந் துவிடப்படும். எனவே, விவசாய பெரு மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்ப டுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.