சேலம், பிப்.10- சேலம் மாநகராட்சி 60 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி யின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா புதனன்று நடை பெற்றது. தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர் தலில் சேலம் மாநகராட்சி 60 ஆவது வார்டில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.சி.சேகர் போட்டி யிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள 60 ஆவது வார்டு, சீலநாயக்கன்பட்டி பகுதியில் தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தை திமுக மத்திய மாவட்ட செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான இரா.இராஜேந்திரன் திறந்து வைத்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதில், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், 60 ஆவது கோட்ட செயலாளர் எஸ்.ஆர்.பழனிசாமி, அவைத் தலைவர் எம்.சதாசிவம், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முக ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இராமமூர்த்தி, ஆர்.வெங்கடபதி பொன்.ரமணி, காங்கிரஸ் கோட்ட தலை வர் ஏ.சந்திரசேகர், சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், கிளை செயலாளர் என்.தங்கராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.