கோவை, மார்ச் 6- தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட இரண்டு ரேசன் கடைகளை பி.ஆர்.நடரா ஜன் எம்பி., திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நாடாளுமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியை முழுமையாக மக்கள் நலத்திட்டங்களுக்கு செயல்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் முன்னிலை வகிக்கிறார். பட்டியலின பகுதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் சமு தாய கூடங்கள், எளிய உழைப் பாளி மக்கள் வசிக்கக்கூடிய பகு திகளில் அங்கன்வாடி மையங்கள், ரேசன் கடைகள், தண்ணீர் தொட்டி கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னு ரிமை கொடுத்து கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளது. ஒவ்வொரு ரூபாயும் திட்டமிட்டு கள ஆய்வு செய்து தொகுதி நிதி ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்துவதால், எதிர்க் கட்சிகள் கூட பி.ஆர்.நடராஜனின் பணியை வெளிப்படையாக பாராட்டி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 12 ஆவது வார்டுக்குட்பட்ட உடை யாம்பாளையம் காந்திநகர் பகுதி யில், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரேசன் கடை கட்டடம் அமைக்க ரூ.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இக்கட்டடப் பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற் றது. இந்த ரேசன் கடை திறப்பு விழா செவ்வாயன்று நடைபெற் றது. இதனை பி.ஆர்.நடராஜன் எம்.பி., திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு, கோவை மாந கராட்சி வடக்கு மண்டல தலைவர் வெ. கதிர்வேல் தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்றக்குழு தலைவரும், 12 ஆவது வார்டு உறுப்பினருமான வி.இராமமூர்த்தி, சிபிஎம் 13 ஆவது வார்டு உறுப்பினர் சுமதி மற்றும் 3 ஆவது வார்டு உறுப்பினர் கவிதா, சிபிஎம் மூத்த தோழரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான யு.கே. வெள்ளியங்கிரி, திமுகவைச் சேர்ந்த முத்துசாமி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆனந்தன், காங்கி ரஸ் பேரியக்கத்தின் குப்புசாமி, சிபிஎம் எஸ்.எஸ். குளம் மேற்குப் பகுதிச் செயலாளர் எம்.சண்முக சுந்தரம், உள்ளிட்ட 200க்கும் மேற் பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோன்று, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட கல்வீரம்பாளையம் முரு கன் நகரில், நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 21 லட்சம் மதிப் பீட்டில் புதிய ரேசன் கடை கட்டப் பட்டு, கட்டிடம் திறப்பு விழா செவ் வாயன்று நடைபெற்றது. விழா விற்கு 37ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் குமுதம் குப்புசாமி தலைமை வகித்தார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றி னார். இதில், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் தெய் வானை தமிழ்மறை, திமுக பகுதி கழகச் செயலாளர் வ.ம.சண்முக சுந்தரம், திமுக நிர்வாகிகள் குப்பு சாமி, தமிழ்மறை, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆறுச்சாமி, முருகேசன், தொண்டாமுத்தூர் ஒன்றியச் செய லாளர் மணி, காங்கிரஸ், கொம தேக உள்ளிட்ட தோழமை கட்சிக ளின் நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக, உடையாம்பா ளையம் மற்றும் கல்வீரம்பாளை யத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கி புதிய ரேசன் கடை அமைத் துக்கொடுத்தற்கு பி.ஆர்.நடராஜ னுக்கு பொதுமக்கள் இதயப்பூர்வ மான நன்றியை நெகிழ்ந்து தெரி வித்தனர்.