districts

img

மார்க்சிஸ்ட் கட்சி தலையீட்டால் பொது கழிப்பிடம் திறப்பு

நாமக்கல், மே 6- நாமக்கல் அருகே பொதுகழிப்பிடத்தை உடனடியாக திறக்குமாறு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கையுடன் கையொ ழுத்து இயக்கத்தையொட்டி, பொது கழிப்பிடம் திறக்கப் பட்டது.  நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பேரூராட்சி 8ஆவது  வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் (ஆத்துவாரி) யில் பொது  கழிப்பிடம் 15 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.  இந்நிலையில், திறக்கப்பட்ட பொது கழிப்பிடம் பூட்டப் பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதனால்  மக்கள் கடும் அவதிக் குள்ளாகினர். இதையறிந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் எருமப்பட்டி கிளை சார்பில், உடனடியாக பொதுகழிப் பிடத்தை திறக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  இதனையறிந்த, எருமப்பட்டி பேரூராட்சி செயல் அலு வலர், பொதுகழிப்பிடத்தை திறப்பதற்கு துரித நடவடிக்கை யாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொதுக் கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.