பள்ளிபாளையம், ஜூன் 6- நாமக்கல் அருகில் காவல் நிலைய புதிய கட்டடத்தை காணொளி காட்சி மூலம் காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் பள்ளி பாளையம் காவல் நிலையங்களில் இருந்து பிரித்து வெப் படை காவல் நிலையம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதில் இரண்டு உதவி ஆய்வாளர்கள், 24 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தற்காலிக மான கட்டடத்தில் இயங்கி வந்த காவல் நிலையத்திற்கு புதிய தாக 12,500 சதுர அடி பரப்பில் ரூ.96 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டடத்திற்கான கட்டுமான பணிகள் வெப்படை ஆனங்கூர் சாலையில் நடைபெற்றது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து. இரண்டு மாதங் கள் கடந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமை வகித்து, கல்வெட்டை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் அன்றாட பணிகளை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதில் திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் உட்பட ஏராள மான உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.