districts

img

அன்னூரில் புதிய நீதிமன்றம் திறப்பு

கோவை, மார்ச் 11- கோவை மாவட்டம் அன்னூரில் புதிய நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ராஜா சனி யன்று திறந்து வைத்தார். கோவை மாவட்டம், அன்னூர் பேரூ ராட்சி பகுதிக்குட்பட்ட காவல் நிலை யத்தில் பதிவாகும் வழக்குகள் மேட்டுப் பாளையம் குற்றவியல் நீதிமன்றத் தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அன்னூர் தாலுகாவை தலை மையிடமாக கொண்டு புதிய நீதி மன்றம் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி அன்னூர், சத்திய மங்கலம் சாலையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில்  புதிய உரிமையியல் மற்றும் குற்ற வியல் நீதிமன்றம் அமைக்கப்பட் டுள்ளது.  இந்த நீதிமன்றத்தை சென்னை  உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி  ராஜா திறந்து வைத்தார். தொடர்ந்து,  அன்னூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணையை துவக்கி வைத்தார்.