கோவை, பிப்.16- மழலையர் பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புத னன்று அனைத்து மழலையர் பள்ளிகளும் திறக்கப்பட்டன. தமிழகத்தில், கொரோனா நோய்த்தொற் றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப் பட்டது. இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண் டும் திறக்கப்பட்டது. இதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால், மழலை யர் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, கொரோனா மூன்றா வது அலையின் தாக்கம் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது கொரோ னாவின் தாக்கம் குறையத் துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இச்சூழலில், நர்சரி பள்ளிகள், எல்கேஜி, யூகேஜி மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் ஆகியவற்றையும் திறக்க அனு மதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அனைத்து நர்சரி பள் ளிகளும் புதனன்று திறக்கப்பட்டன. முன்ன தாக, குழந்தைகளின் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அனைத்து குழந்தைகளையும் வகுப்புகளில் அமர வைத்து வகுப்புகள் எடுக்கப்பட்டன.