districts

img

ஈரோட்டில் சுழலும் நூலகம் திறப்பு

ஈரோடு, பிப்.18- ஈரோட்டில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பிற்காக சுழலும் நூல கம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அமைப் பின், ஈரோடு மாவட்டக்குழு  சார்பில் ஈரோட்டில் கடந்த 4 ஆண்டுக ளாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்விற்கான  இலவச பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகி றது. இதன் மூலம் 6 பேர் அரசு பணியில் சேர்ந்து  பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்  இப்பயிற்சி மையத்திற்காக சுழலும் நூலகம்  திட்டம் தொடங்கப்பட்டது. ஈகேஎம் அப்துல் கனி இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பயிற்சி மைய  ஒருங்கிணைப்பாளர் ஏ.ஹாத்திம்தாய் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், கருடா  ஹோம் நிறுவன தலைவர் எம்.ரவிச்சந்தி ரன், பள்ளியின் தாளாளர் முஹம்மது தாஜ்  முஹைதீன், எஜெஎஸ் நிறுவன உரிமையா ளர் ஏ.ஜாபர் சாதிக், மூத்த வழக்கறிஞர் பி. கிறிஸ்டோபர், மாமன்ற உறுப்பினர் பாத் திமா, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில  உதவித்தலைவர் ப.மாரிமுத்து, உதவிச்செ யலாளர் கே.எஸ்.இஸாரத்தலி ஆகியோர் உரையாற்றினர். முடிவில், பயிற்சி வகுப்பு  மேற்பார்வையாளர் மு.உதயகுமார் நன்றி கூறினார்.