உதகை, மார்ச் 7- குன்னூர் லாலி மருத்துவமனையில் தன்னார்வலர்கள் மூலம் ரூ.70 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பொழிவு செய்யப் பட்ட குழந்தைகள் நல சிகிச்சை பிரிவை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு லாலி மருத்துவமனை 1902 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இம்மருத்துவமனையில் தன் னார்வலர்களின் பங்களிப்புடன் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு நவீனமாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஞாயிறன்று தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், சார் ஆட்சியர் தீபனா விக்னேஷ்வரி, தன்னார்வலர் ராதிகா, மருத்துவ இணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், குழந்தை களுக்கான பிரிவில், ஒரு தீவிர சிகிச்சை பிரிவு அறை, 12 மெத்தைகள், குழந்தைகளுக்கான வெண்டிலேட்டர், கேஎம்சி எனும் பிறந்த குழந்தையுடன் தாயை அமர வைக்கும் இருக்கை ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தை களுக்கு நவீன பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தனர்.