districts

img

நலவாரிய அலுவலகத்தில் ஆன்லைன் சர்வர் குறைபாடு

கோவை, ஜூலை 31- நலவாரிய அலுவலகத்தில் அடிக் கடி ஏற்படும் ஆன்லைன் சர்வர் குறை பாடுகளை உடனுக்குடன் சரி செய்ய  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  12 ஆண்டுகளாக உயர்த்தப்ப டாமல் இருக்கும் ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து விதமான பண பயன்களையும் உயர்த்தி வழங்க  வேண்டும். ஆன்லைன் சர்வர்களில்  அடிக்கடி ஏற்படும் குறைபாடுகளை  நிவர்த்தி செய்ய வேண்டும். அனைத்து பண பயன்களும் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவ டிக்கை எடுக்க வேண்டும், தையல் கூட்டுறவு சங்கத்தில் தமிழக அரசின்  இலவச சீருடை தைக்கும் தையல்  தொழிலாளர்களுக்கு எட்டாண்டு களாக உயர்த்தப்படாமல் உள்ள  கூலியை உயர்த்தி வழங்கிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பட்டத்தின் ஒருபகுதியாக சிஐ டியு கோவை மாவட்டக்குழு சார்பில், ஆட்சியர் அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் கே.மனோகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை வடக்கு பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஆர்.கேசவமணி துவக்கி வைத்தார். கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி ஆகியோர் உரையாற்றி னர். முடிவில் சுமைப்பணி சங்க செய லாளர் ஆர்.ராஜன் நன்றி கூறினார். இதில், ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.