நாமக்கல், மே. 4- நாமக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதால், இதில் சிக்கி பாதிக்கப்படாமல் இருக்க, பொதுமக்கள் விழிப்புடன் செயல் பட வேண்டும் என மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தி உள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், சமீபகாலமாக ஆன்லைன் மூலம் நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மக்களிடம் போதுமான விழிப்பு ணர்வு ஏற்படவில்லை. பொது இடங்க ளில் செல்போன் திருட்டும் அதிகரித்து வரு கிறது. ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு என்ற பெயரிலும், அதிக லாபம் தருவதாக கூறியும் வரும் தகவல்களை நம்பி, பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ராஜேஸ்கண்ணன் கூறுகையில், தற் போது பரவலாக சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. போதிய விழிப்பு ணர்வு இல்லாமல் பொதுமக்கள் இதுபோன்ற குற்றவாளிகளிடம் ஏமாந்து விடுகின்றனர். அவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு, அவற்றை தவிர்க்க வேண்டும். பொது மக்களை செல்போனில் தொடர்பு கொண்டு, கல்வித்துறையில் இருந்து பேசுவதாக கூறி உங்களுடைய மகன், மகள் படிக்கும் பள்ளி பெயரை சொல்லி, கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி, உங்களது வங்கி விவ ரங்களை கேட்டால், கொடுத்து ஏமாறக்கூ டாது. உங்களது வங்கி கணக்கிற்கு கல்வி உத வித்தொகை பணம் வரும் என்று கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம். பிரபல நிறுவனங்களின் பெயரில் உள்ள போலியான செல்போன் அப்ளிகேசன்களை அறிமுகப்படுத்தி, அதில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும், மற்றும் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி பணம் முதலீடு செய்யச் சொல்லி பரிந்துரை செய்தால், அதை நம்பி பணம் முதலீடு செய்து ஏமாற வேண் டாம். பொதுமக்கள் யாரேனும் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டால், உடனடி யாக 1930 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணை அழைத்து, புகார் செய்ய வேண்டும். இவ்வாறு ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார்.