districts

img

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடைப்பணி தீவிரம்

ஒட்டன்சத்திரம், ஜூலை 15-  ஒட்டன்சத்திரம் பகுதியில் சாகுபடி செய்  யப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அறுவடை  செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரம், கள்ளிமந்தையம், இடையக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிணற்றுப்பாசனம் மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.  சின்னவெங்காயத்தை அனைத்து பகுதி களிலும் பயிர்செய்யமுடியாது. ஈரம் கலந்த  காற்றும், மிதமான தட்பவெட்ப நிலையும் உள்ள பகுதிகளில் மட்டுமே சிறப்பான மக சூல் பெறமுடியும்.  அன்றாட சமையலுக்கு அத்தியாவசிய மான சின்ன வெங்காயத்தின் விலை ஏற்ற  இறக்கங்களை கருத்தில்கொண்டு பட் டறை அமைத்து விற்பனை செய்ய முடி யும் என்பதால் விவசாயிகள் சின்ன வெங்  காய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வைகாசி மாதம் நடவு செய்யப்பட்டு நன்கு விளைச்சல் ஏற்பட்டு தற்போது அறு வடை செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விளைச்சல் ஏற்பட்ட சின்னவெங்கா யத்தை ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக் கல் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவ சாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சமீப வாரமாக பெய்யும் மழை மற்றும்  காற்றால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம் அதிக வரத்தால் ஒரு கிலோ  ரூ.25-க்கு குறைவான விற்பனையானது. ஆனால் தற்போது வரத்து குறைந்துள்ள தால் தரத்திற்கு தகுந்தாற்போல் கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனையாகி வருகிறது. தமிழக அரசு சின்ன வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தி அதன் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தகின்றனர்.