districts

img

ஒரு யானை மூலம் 18.25 லட்சம் மரங்கள் வளரும்

திருப்பூர், ஆக. 12 - ஒரு யானை, அதன் வாழ்நாளில் 18  லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளர்வ தற்கு காரணமாக இருக்கிறது என்று யானைகள் தின விழிப்புணர்வு கருத்த ரங்கில் தெரிவிக்கப்பட்டது.  உலக யானைகள் தினத்தை முன் னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட் டம் அலகு-2 சார்பாக சனியன்று கல்லூரி  வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் யானைகள் தின விழிப்புணர்வு கருத்த ரங்கு நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.  அவர் பேசுகையில், வனப்பரப்பு குறைவது, யானைக ளுக்கு தேவையான உணவு கிடைக்கா மல், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படு கிறது. இதுவும் யானைகள் அழிவிற்கு  காரணமாகிறது. இதனால்தான் சில நேரங்களில் காடுகளை விட்டு சாலை,  குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வருகின்றன. இதை மக்கள் யானைகள்  அட்டகாசம் செய்கிறது என்று தவறாக  சொல்கிறார்கள்.  உலகில் ஆண்டுதோறும் 35 ஆயிரம்  யானைகள் வேட்டையாடப்படுகின் றன. ஆசிய யானைகளில் 44 சதவீதம்  இந்தியாவில் உள்ளன.  நினைவாற்றல்,  இன்பம், துன்பம், கோபம், பின் விளைவுகளை எதிர்கொள்ளுதல் போன்ற‌ நுட்பமான உணர்வுகளை யானைகள் பெற்றுள்ளன. ஒரு யானை  தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம்  மரங்கள் வளரக் காரணமாக இருக்கி றது. பிறக்கும் போதே யானை குட்டிகள்  100 கிலோவிற்கு அதிகமாக இருக்கும்,  ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் தண்ணீர்  இருந்தாலும் அதனை வாசனை மூலம்  தெரிந்து கொள்ளும் திறன் உடையது. காட்டின் ஆதார உயிரினமான யானை களை காப்பாற்றுவது பல்லுயிர் வாழ் வில் இன்றியமையாத அறச்செயல்  ஆகும் என்று பேசினார். மாணவச் செயலர்கள் சுந்தரம், ராஜபி ரபு, காமராஜ், செர்லின், நவீன், சபரிவா சன், விக்னேஷ் ஆகியோர் தலைமை யில் 60 க்கும் மேற்பட்ட நாட்டு நலப் பணி திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாச கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி,  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  இந்நிகழ்வில் இயற்கை கழகச் செய லாளர் ராம்குமார் உட்பட மாணவ மாண விகள் பலர் கலந்து கொண்டனர். இந்நி கழ்வினை கல்லூரி முதல்வர் கிருஷ் ணன் ஏற்பாடு செய்திருந்தார்.