districts

img

ஈரோட்டில் ஓணம் திருவிழா

ஈரோடு, அக். 13- ஈரோடு கேரள சமாஜத் தின் 75ஆம் ஆண்டு விழா மற்றும் ஓணம் திருவிழா ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. சமாஜ் தலைவர் சசி தரன் தலைமை வகித்தார்.  செயலாளர் ராஜேஷ் நேதாஜி வரவேற்றார்.  மாவட்ட ஆட்சியர் ஹெச்.  கிருஷ்ணனுண்ணி, ஈரோடு  கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  திருமகன் ஈவெரா, கேரள அரசுத் துறை  அலுவலர் அனு சாக்கோ, மலையாளம் மிஷன் தமிழக செயலாளர் கும்பளங்காடு உண்ணிகிருஷ்ணன், எம்சிஆர் நிறுவனர் தலைவர் ராபின், சட்ட  ஆலோசகர் கேசவன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். விழாவில், சிறப்பு அழைப்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கேரள மாநில  முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் பங் கேற்றார்.  ஓணம் விழாவையொட்டி கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றன. பொதுத் தேர்வில் அதிக  மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது. இவ்விழாவில் கேரள மாநிலத்தவா்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனா்.