அவிநாசி ஒன்றியம் சேவூர் அருகில் வேட்டுவபாளையம் கிராமத்திற்கு செல் லும் வழியில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வந்தது. அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பெண்களுக்கு இந்த இடம் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது. எனவே மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மனமகிழ் மன் றத்தை மூட உத்தரவிட்டார். மனமகிழ் மன்றம் மூடப்பட்டதை அடுத்து திருப் பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜுக்கு சேவூர் பகுதி வாழ் மக்கள் ஆட்சியர கத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.