districts

img

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

பொள்ளாச்சி, ஜூலை 28- பொள்ளாச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சது ரங்கப் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சதுரங்க சங்கம், சங் கவி வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் எழில் பல்  மருத்துவமனை சார்பில், கக்கன், காமராஜர் நினைவாக 11  ஆவது மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டி சங்கவி பள்ளி  வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. பள்ளியின் தாளா ளர் ஆர்.ரமேஷ்பாபு, பொள்ளாச்சி சதுரங்க சங்கத் தலைவர்  ஜி.கருணாநிதி, செயலாளர் பரமேஸ்வரன், எழில் மருத்துவ மனை பல் நிபுணர் சங்கவி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இப்போட்டியில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். 8,10,12,15,25 என வயது வாரியாக 5 பிரிவாக  பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதலில் வரும் 15 இடம் பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம்  வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும்  சான்றுகளும், பதக்கமும் வழங்கபட்டன. இதில் பொள்ளாச்சி  நகர்மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், மாநில தட கள சங்க சேர்மன் சீனிவாசன், சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்,  ஜெயகுமார் நன்றி கூறினார்.