districts

img

வாகனம் மோதி மூதாட்டி பலி, சிறுமி படுகாயம்

பள்ளிபாளையம், மே 9- பள்ளிபாளையம் அருகே மூதாட்டி மீது  வாகனம் மோதி சம்பவ இடத்திலே பலி யனார். உடனிருந்த சிறுமி படுகாயம டைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே மாதேஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி இளஞ்சியம் (60). இவர்  திங்களன்று காலையில் பேத்தி தேவகி யுடன் சாலையை கடக்க முயன்றார். அப் போது தனியார் நூற்பாலை வாகனம் மூதாட்டியின் மீது மோதியதில் மூதாட்டி இளஞ்சியம் தலை நசுங்கி சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். உடன் வந்த சிறுமி  தேவகி வாகனத்தில் சிக்கி படுகாயம்  அடைந்தார். இதையறிந்த அக்கம்பக்கத் தினர் சிறுமியை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த  பள்ளிபாளையம் போலீசார் உயிரிழந்த மூதாட்டி இளஞ்சியம் உடலை மீட்டு பள்ளி பாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.  முன்னதாக, விபத்து ஏற்பட்டு நீண்ட நேர மாகியும்  ஆம்புலன்ஸ் வாகனம் வராததால், மூதாட்டி இளஞ்சியம்  உறவினர்கள் ஆவேச மடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், விபத்து நிகழ்ந்த பகுதி நான்கு  சந்திப்பு சாலையாக உள்ளதால் வேகத் தடை ஏதும் இல்லாததால் அடிக்கடி விபத்துக் கள் ஏற்படுவதால், அந்த சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும். மேலும் தொடர்ந்து விபத்துக்கள் நிகழாமல் தடுக்கும்  வகையில் வேகமாக செல்லும் வாகனங் களை கண்காணிக்கும் வகையில் காவல் துறை சார்பில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.