ஈரோடு, நவ.15- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று தமிழ் நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பு சார்பில் மாநிலம் தழு விய தர்ணா நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வு கால பணப்பயன்களை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட் டத்தை வாரியமே நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாநிலம் முழுவதும் தர்ணா நடத்த இவ்வமைப்பின் மாநிலக் குழு அறைகூவல் விடுத்திருந்தது. அதன்ஒருபகுதியாக, ஈரோடு மேற் பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தர்ணா விற்கு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கிளைத் தலைவர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் எச்.ஸ்ரீராம் தர்ணாவை தொடங்கி வைத்து பேசினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண் டலச் செயலாளர் சி.ஜோதிமணி நிறைவுரையாற்றினார். கிளைச் செயலாளர் எம்.ஆர்.பெரியசாமி மற்றும் பி.ஸ்ரீதேவி உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். முடி வில், கிளைப் பொருளாளர் கே. ஆர்.சண்முகம் நன்றி கூறினார். கோவை கோவை மின் வாரிய தலைமை பொறியாளர் அலுவலக நுழைவா யில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, கோவை கிளைத் தலை வர் ம.ஞானப்பிரகாசம் தலைமை ஏற்றார். கிளைச் செயலாளர் ப. விவேகானந்தன், மண்டலச் செய லாளர்ஆர்.சுந்தரேசன், இணைச் செயலாளர் சி.வி.மீனாட்சிசுந்தரம், பாலக்காடு கிளைச் செயலாளர் பி. ராமதாஸ், குந்தா கிளைச் செயலா ளர் என்.குமார் ஆகியோர் கோரிக் கைகள் குறித்து உரையாற்றினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். கிளைப் பொருளாளர் கே.ராமச்சந்திரன் நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, மின்வாரிய ஓய்வுபெற் றோர் அமைப்பின் மாவட்டத் தலை வர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செய லாளர் ஜி.பி.விஜயன், பொருளா ளர் எம்.சின்னசாமி, துணைத்தலை வர்கள் பி.சுப்பிரமணி, ஆர்.ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.