காட்டு யானை தாக்கி முதியவர் பலி
கோவை, டிச.26- கோவை நரசீபுரம் பகுதியில், காட்டு யானை தாக்கிய தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், போளூவாம்பட்டி வனச்சரகம் நரசீபு ரம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் சின்னகுட்டி(73). இவர், வனப்பகுதி ஒட்டியுள்ள ரங்கநாதன் பொறியியல் கல்லூரி பின்புறம் உள்ள பெரியசாமி தோட்டம் களத்துக்காடு பகுதி யில், செவ்வாயன்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற தாக கூறப்படுகிறது. அப்போது ஒற்றை காட்டு யானை தாக்கி, சின்னக்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள் ளார். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்ப டையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை காவல் துறையினர், முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் தொடர்பு முகாம்: ஆட்சியர் பங்கேற்பு
கோவை, டிச.26- மோப்பிரிபாளையத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சி யர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். பின்னர், பொது மக்களிடமிருந்து 150-க்கும் ஏற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். இதன்பின்னர் விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்டத்தில் புறந கர் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகி றது. அதில் முன்னோடி பேரூராட்சியாக, இந்த பேரூராட்சி இருந்து வருகிறது. இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்க ளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார். முன்னதாக முகாமில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், விவசாய நிலம் திட்டங்கள், சொட்டுநீர் பாசனம் அமைப்பது, விவசாய மானியம் உள்ளிட்ட கோரிக்கைகள் பயனாளிகளுக்கு நிறைவேற்றப்பட்டது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் பேரூராட்சி தலைவர் சசிகுமார் வரு வாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
கோவை: புறநகர் பகுதியில் 500 சிசிடிவி கேமராக்கள்
கோவை, டிச.26- சூலூர் சுற்றுவட்டாரத்தில் பொருத் தப்பட்டுள்ள 500 சிசிடிவி கேமராக் களை கண்காணிக்க, சூலூர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்ட தனி கட் டுப்பாட்டு அறையை கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி திறந்து வைத்தார். கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப் புறங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க ஏதுவாக காவல் நிலைய வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஒன்றிணைந்த சிசி டிவி கேமரா கட்டுப்பாட்டு அறை மற்றும் காவலர்கள் ஓய்வுவறை செவ்வா யன்று திறக்கப்பட்டது. இதனை கோவை மேற்கு மண்டல ஐஜி பவா னீஸ்வரி, டிஐஜி சரவண சுந்தர், மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், காவல் ஆய்வாளர் மாதையன் ஆகியோர் ரிப் பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் ஐஜி பவானீஸ்வரி செய்தி யாளர்களிடம் கூறுகையில், குற்றங் களை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பெரும் உதவியாக உள்ளன. கோவை மாவட்டம் முழு வதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறை சார்பில் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்பு றங்களில் பொருத்தப்பட்டுள்ள 500 சிசிடிவி கேமராக்களுக்கு ஒரே இடத் தில் கண்காணிப்பு மையம் அமைக் கப்பட்டுள்ளது. குற்றங்களை முன்கூட் டியே தடுப்பதற்கு காவல்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட் டங்களில் சிசிடிவி கேமராக்க ளின் எண்ணிக்கையை அதிகரிப்ப தற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. அதேபோல் விவசாய நிலங்கள் மற்றும் ஊருக்கு வெளியே வீடு கள் கட்டியுள்ள 4000க்கும் மேற்பட்ட வர்களை கண்காணித்து வருகிறோம். அங்கு வாழும் மூத்த குடிமக்களின் அலைபேசியில் ஸ்பீடு டயலில் காவ லர்களின் தொடர்பு எண்களை பதிவு செய்துள்ளோம். ஆபத்து காலத்தில் காவல்துறையை உடனடியாக தொடர்பு கொள்ள இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும். அதிக அள வில் சிசிடிவி கேமராக்கள் பொருத்து வதன் மூலம் குற்றச் சம்பவங்கள் பெரு மளவு குறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழில் அதிபரிடம் பண மோசடி அமமுக பிரமுகர் கைது
கோவை, டிச.26- சிங்கப்பூர் தொழில் அதிபரிடம் இழந்த பணத்தை வாங்கி தருவதாக நாடகமாடி, கோவை அலுமினிய வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த அமமுக பிரமுகரை, கோவை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. அலு மினிய வியாபாரியான இவருக்கு, கடந்த மூன்று ஆண்டு களுக்கு முன்பு சிங்கப்பூரில் வசித்து வரும் தூத்துக்கு டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அறிமுகமாகி உள் ளார். இந்த நிலையில், தொழில் ஒப்பந்தம் அடிப்படையில் கண்ணனுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை ரவி அனுப்பி வைத்து உள்ளார். மாதங்கள் பல கடந்தும் கண்ணன் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள் ளார். இதுகுறித்து, ரவி ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்து உள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கண்ணனின் ஊரைச் சேர்ந்தவரும், அமமுக பிரமுகருமான பூலோக பாண்டியன் என்பவர் ரவிக்கு அறிமுகமாகி உள்ளார். அப்போது பூலோக பாண்டி யன், கோவை தொழில் அதிபரான ரவியிடம், கண்ணனின் சொத்துக்கள் அடமானத்தில் உள்ளதாகவும், 13 லட்சம் கொடுத்தால் சொத்துக்களை மீட்டு தருவதாகவும் கூறி உள்ளார். இதை நம்பிய ரவி, பூலோக பாண்டியனிடம் இரண்டு தவணைகளில் 13 லட்சம் ரூபாயை கொடுத்து உள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட பூலோக பாண்டி யன், கண்ணனிடம் இருந்து பணத்தை பெற்று தரவில்லை என்று கூறப்படுகிறது. தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்த ரவி, செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பூலோக பாண்டியனை கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அவிநாசிபாளையம் சுங்கச்சாவடி செயல்படுத்தப்படாது: பி.ஆர்.நடராஜன் எம்.பி., யிடம் மாவட்ட ஆட்சியர் உறுதி
திருப்பூர், டிச.26- பொங்கலூர் ஒன்றியம், அவிநாசிபாளை யம் அருகே அமைக்கப்பட்ட சுங்கச்சாவ டியை செயல்படுத்துவதற்கான எந்த திட்ட மும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜனிடம் உறுதியளித்தார். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று சந்தித்தார். அப் போது, திருப்பூர் மாவட்டத்தில் அதிக மக் கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உயர் நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளா கத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண் டும். இடுவாய் பகுதியில் குப்பை மறுசுழற்சி செய்வதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், புதிதாக அமைக்கப்பட்ட பொங்கலூர் ஒன்றியம் வடக்கு அவிநாசிபாளையம் சுங்கச்சாவடி ஜன.1 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரு வதாக தகவல்கள் வருவது குறித்து கேட் டார். செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற் கான எந்த திட்டமும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கோவை உறுதி யளித்தார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம் பத், இடுவாய் ஊராட்சிமன்ற தலைவர் கே. கணேஷன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுபான கடைப் பொருட்களை சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு
அவிநாசி டிச.26- திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புதிய திருப்பூர் பகுதியில் ஆயத்த ஆடை பூங்கா அமைந்துள்ளது. இந்த ஜவுளி பூங்காவிற்கு எதிர்புறம் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் மதுபான கூடத் துடன் மதுபான கடை செயல்படுகிறது. இதில், ரகளையில் ஈடு பட்டு அங்கு இருந்த மேஜை, நாற்காலிகளை சிலர் உடைத்துள் ளனர். இதனை தடுக்க சென்ற பார் ஊழியர் சூர்யாவையும் தாக் கியுள்ளனர். தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யா புகாரின் பேரில், ரகுவரன், தினகரன், அஜய், சீனு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாய்கள் தொல்லை: திமுக, அதிமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
சேலம், டிச.26- சேலம் மாநகராட்சியில் அதிகளவில் நாய்கள் தொல்லை இருப்பதாக திமுக, அதிமுக கவுன்சிலர்கள், ஆணையரின் உரையை ஏற்க மறுத்து மாறி மாறி குற்றச்சாட்டியதால், மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி மன்ற சாதராண கூட்டம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் தலைமையிலும், ஆணையர் சீ.பா லச்சந்தர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் திமுக கவுன் சிலர்கள் பேசுகையில், சேலம் மாநகராட்சி, 60 வார்டுகளி லும் ஏராளமான நாய்கள் உள்ளன. இதனால் விபத்துக் கள் மற்றும் குழந்தைகளை துரத்தி கடிப்பது என்ற பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாய் களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து பேசிய அதிமுக கவுன்சிலர்களும் இதே கோரிக் கையை தொடர்ந்து வைத்தனர். இரண்டு கோரிக்கைகளுக் கும் பதிலளித்த மாநகராட்சி ஆணையாளர், சேலம் மாநக ராட்சியில் ஏராளமான நாய்கள் இருப்பதை நானே அறிந் தேன். நாய்களைப் பிடித்து கருத்தடை மட்டுமே நம்மால் செய்ய முடியும். நாய்களை கொல்ல நமக்கு எந்த ஒரு உரிமை யும் கிடையாது. நாய்களை பாதுகாக்க பல்வேறு அமைப்பு கள் உள்ளன. தமிழ்நாட்டில் அதிகளவில் நாய் உள்ள இடத்தில் சேலம் மாநகராட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது, என்றார். ஆனால், மாநகராட்சி ஆணையரின் பதிலுரையை ஏற்க மறுத்து கவுன்சிலர்கள் மாறி மாறி நாய்கள் குறித்து குற்றச் சாட்டு தெரிவித்ததால், மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரப ரப்பு நிலவியது.
தருமபுரி புதிய ஆட்சியர் அலுவலகம்: கட்டுமானப் பணிகள் தீவிரம்
தருமபுரி, டிச.26- தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே, ரூ.36.62 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 5 மாடியில், புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டம், சேலம் மாவட் டத்தில் இருந்து 1965 ஆம் ஆண்டு அக்.2 ஆம் தேதி பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது. அதன்பின் நிர்வாக கார ணங்கள், அதிகமான கிராமங்கள் மற் றும் பரந்து விரிந்த பகுதி காரணமாக, கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்.9 ஆம் தேதி, தருமபுரியில் இருந்து கிருஷ்ண கிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. சேலத்தி லிருந்து தருமபுரி மாவட்டம் தனியாக பிரித்த பின்னர், 1967 ஆம் ஆண்டு ஆட்சி யர் அலுவலகம் கட்டப்பட்டு, அப்போ தைய முதல்வர் பக்தவத்சலம் திறந்து வைத்தார். தருமபுரியின் முதல் ஆட்சிய ராக திருமால் பணியாற்றினார். இது வரை 45க்கும் மேற்பட்ட ஆட்சியர்கள் பணியாற்றி உள்ளனர். தற்போதைய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு 56 ஆண்டுகள் ஆகிறது. மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தகுந்தாற்போல், பணிகள் இடம் விஸ்தரிப்பும், இடம் தேவைக ளும் அதிகரித்துள்ளது. தற்போதைய ஆட்சியர் அலுவலகம் பின்புறம், கூடு தல் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இதுவும் போதுமான தாக இல்லை. சில அரசு துறைகள் வாடகை கட்டடங்களில் இன்னும் வெளி யில் இயங்கி வருகின்றன. இதனால் அர சுக்கு செலவு சுமையாக உள்ளது. அரசு அலுவலகங்கள் அரசு கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. தற்போதைய ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 34 துறைகள் இயங்கி வரு கின்றன. இக்கட்டடத்தில் இடம் இல்லா மல், தனித்தனியாக ஆங்காங்கே அரசு துறைகள் இயங்கி வருகின்றன. இதை தவிர்க்க ஒரு குடைக்குள் அனைத்து அரசு துறைகளும் கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது புதியதாக ஆட்சியர் அலுவல கம் கட்டுவதற்கு, சுற்றுலா ஓய்வு மாளிகை பின்புறத்தில், பழைய கோட் டாட்சியர் அலுவலக மைதானத்தில் 3 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன் கட்டுமானப் பணியை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தற்போது ரூ.36.62 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 5 மாடி யில், புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப் பட்டு வருகிறது. பணிகள் நடக்கும் இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டுள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகை யில், தருமபுரி - சேலம் சாலையில் ஆட்சி யர் அலுவலகம் 56 ஆண்டுகளாக ஒரே கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் முக்கிய அரசு துறைகள் இயங்க போதி இடவசதி இல்லை. இதை யடுத்து அனைத்து முக்கிய துறை களும், ஒரே கட்டடத்தில் இயங்க, புதிய ஆட்சியர் அலுவலகத்தின் முதன்மை கட்டடம் ரூ.36.62 கோடியில் தரை தளம் மற்றும் 5 மாடியில் கட்டப்பட்டு வருகி றது. தரைதளம் மற்றும் முதல் மாடி முடித்து, 2 ஆவது மாடி கட்டுமானப் பணி கள் நடந்து வருகிறது, என்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது...
வனத்துறை வேண்டுகோள்
கோவை, டிச.26- வனவிலங்குகளுக்கோ, வனப்பகுதியின் சூழலை கெடுக்கும் வகையிலோ புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண் டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத் துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வனத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது, இரவு நேரங்களில் புத் தாண்டு கொண்டாடத் தின் போது அதிக ஒலி எழுப்பும் பட்டாசு, வானவேடிக்கை போன்ற வற்றை வெடிக்க கூடாது. வனப்பாதைக் குள் பயணிப்பவர்கள் வாகன நெரிசல்களை ஏற்படுத்தி அங்குள்ள வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது. அதிக ஒளி உமி ழும் விளக்குகளை பயன்படுத்த கூடாது. வனப்பகுதிக்கு தீ விபத்து விளைவிக்கும் எந்த செயலிலும் ஈடுபடகூடாது. மது அருந்தி விட்டு வனசாலைகளில் வாகனம் ஓட்டி வரக் கூடாது. அதுபோல விடுதிக்கு அருகில் யானை,மான், காட்டுமாடு போன்ற வன விலங்குகள் தென்பட்டால் விரட்ட முயற்சிக் காமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், வனசாலையை பயன்ப டுத்துவதாக இருந்தால் இரவு 8 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாடத்தின் போது பயன் படுத்தகூடாது. புத்தாண்டு கொண்டாட்டத் தில் உண்டாகும் கழிவுகள் அனைத்தையும், வனப்பகுதிக்குள் கொட்டாமல் உரிய முறை யில் அவற்றை அப்புறபடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையை சேதப்படுத்தியவர்களுக்கு அபராதம்
கோவை, டிச.26- கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பய னீர் மில் சாலை, காந்தி நகர், முருகன் நகர் ஆகிய பகுதிகளில் 11 தார்சாலைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் 4ஆவது வார்டுக்குட்பட்ட சின்னமேட் டுப்பாளையம் பகுதியில் 4 இடங்களில் சாலைகள் அமைக் கும் பணிகளை மாநகராட்சி மேயர் கல்பனா, ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்ட னர். 4பின்னர், மணியகாரன்பாளையம் பகுதியில் அமைக் கப்பட்டுள்ள சாலைகளைப் பார்வையிட்டனர். அப்போது, 19ஆவது வார்டு, மணியகாரன்பாளையம், திருமால் நகரில் புதிதாக தார்சாலைப் பணிகளுக்காக வெட்மிக்ஸ் அமைக் கப்பட்ட இடத்தில், கழிவுநீர் வெளியேற்றுவதற்காக சாலை யைச் சேதப்படுத்திய வீட்டின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும், லட்சுமி நகர் பகுதியில், வீட்டு மாடியில் அமைக் கப்பட்டுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வெளியேறிய தண்ணீர், அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை சேதப்படுத்தியதற்காக, வீட்டின் உரிமையாள ருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாநகராட்சி ஆணை யர் உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின் போது, வடக்கு மண்ட லத் தலைவர் கதிர்வேல், மண்டல சுகாதார அலுவலர் ராதாகி ருஷ்ணன், செயற்பொறியாளர் இளங்கோவன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
தருமபுரி, டிச.26- பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் அதிவே கத்தில் வரும் பேருந்துகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், மூன்று இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் சுமார் 1.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. எப் போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பேருந்து நிலை யத்திற்குள் அதிவேகத்தில் உள்ளே நுழையும் பேருந்து கள், இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் வேகத் தடை இல்லாததால் தாறுமாறாக வளைவில் முந்தி செல்கின் றனர். இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர், பெண்க ளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பேருந்து நிலைய நுழைவு வாயிலில் முன்பு ஜல்லிக்கற்கள் அதிகள வில் கொட்டப்பட்டுள்ளதால் வாகனங்களின் சக்கரங்களில் சிக்கி கற்கள் நடந்து செல்பவர்கள் மீதும், வாகனத்தில் செல்ப வர்கள் மீதும் பட்டு விபத்து ஏற்படும் வண்ணம் உள் ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற் கொண்டு பேருந்து நிலையம் நுழைவு பகுதி, நகர் மற்றும் புறநகர் பேருந்து நிலையம் பகுதி என மூன்று இடங்க ளில் விரிவான வேகத்தடை அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.