districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கட்டாயப்படுத்தி உரம் விற்பனை உரக்கடைக்கு அதிகாரிகள் சீல்

திருப்பூர், நவ.15- குன்னத்தூரில் உரம் வாங்கச் சென்ற விவசாயியிடம் காம்ப்ளக்ஸ் உரமும் சேர்த்து வாங்க வேண்டும் என நிர்பந்தம் செய்த உரக்கடைக்கு ஏழு நாட்கள் விற்பனைத் தடை விதிக் கப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி -  விரும்மாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தமிழ் நாடு விவசாய சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா தலைவரா கவும் உள்ளார். இவர் கடந்த 12ஆம் தேதியன்று குன்னத்தூர்  முத்து கார்ப்ரேஷன் உரக்கடையில் யூரியா உரம் வாங்க சென்றார். அப்போது, அந்த கடையில் இருந்தவர், காம்ப்ளஸ்  உரம் வாங்கினால் தான் யூரியா உரம் வழங்கப்படும் என  தெரிவித்து, யூரியா உரம் தர மறுத்து விட்டார்.  இது குறித்து உடனடியாக வேளாண் துறை அலுவலகத் தில் புகார் செய்யப்பட்டது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரி களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.  இதன் மீது ஊத் துக்குளி வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஆய்வு  மேற்கொண்டு, புகாரை உறுதிப்படுத்தினர். எனவே மேற்படி கடையை திங்கள்கிழமை முதல் ஏழு நாட்களுக்கு செயல்படு வதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.  விவசாயிகளுக்கு உரம் தர மறுப்பதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும், வேறு உரம் உள்ளிட்ட பொருட்களை யும் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதும் ஏற்க முடி யாதது. எனவே விவசாயிகள் சங்கம் அளித்த புகாரின் மீது உட னடியாக ஆய்வு செய்து, இந்த உத்தரவை பிறப்பித்ததற்கு தமிழ்நாடு விவசாய சங்கம் வரவேற்பு தெரிவிப்பதாக மாவட்ட செயலாளர் ஆர்.குமார் கூறினார்.  மேலும், விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம்  தடையின்றி தேவையான உரங்கள் கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

திருப்பூர் மாநகரில் ரூ.135.63 கோடி வரி பாக்கி

திருப்பூர், நவ.15 – திருப்பூர் மாநகரில் குடிநீர், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு இனங்களில் ரூ.135.63 கோடி நடப்பு ஆண்டு நிலுவையாக உள்ளது. இந்த வரி இனங்களை செலுத் தும்படி மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி கேட்டுக் கொண்டிருக்கிறார். திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரி  இனங்களை வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை செலுத்தலாம் என  மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி கூறியுள்ளார். மாநக ராட்சி மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச் சல், மண்ணரை, முத்தணம்பாளை யம், வீரபாண்டி, முருகம்பாளை யம் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல் லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம். https://tnurbanepay.tn.gov.in என்ற இனையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் சேவையை பயன்படுத்தலாம்.  திருப்பூர் மாநகரில் 2022-23ஆம் ஆண்டுக்கு, சொத்துவரி ரூ.92.16 கோடியும், காலியிட வரி  ரூ.7.82 கோடியும், தொழில் வரி ரூ.2.32 கோடியும், குடிநீர் கட்டண ரூ.18.44 கோடியும், குத்தகை இனத்தில் ரூ.8 கோடியும், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் ரூ.5.14 கோடியும், பாதாள சாக்கடை கட்டணம் ரூ.1.75 கோடியும் வசூல் நிலுவையாக உள்ளது. திடக்கழிவு  மேலாண்மை  கட்டண இனத்தில் வரி திருத்தம் செய்யப்பட்டு கேட்புகள் சரி செய்யப்பட்டு வருவதால் நிலுவை தொகையை செலுத்தவும்.  மேலும் வரும் 17ஆம் தேதியன்று அனைத்து  மண்டலங்களிலும் நடக்கவிருக்கும் சிறப்பு முகாம்களில் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே பொது மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பேருந்துகள் மோதி விபத்து: 27 பேர் காயம்

திருப்பூர், நவ. 15 - திருப்பூர் அருகே தனியார் பேருந்தும், பனியன் நிறுவன தொழிலாளர் பேருந்தும் மோதி விபத்து நேரிட்டது. இதில் 27 பேர் காயமடைந்தனர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் திங்களன்று காஞ்சனா என்ற தனியார் பேருந்து  அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இப்பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அதே போல் பல்லடம் சாலை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனிக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், பனியன் ஊழியர் களை ஏற்றி கொண்டு செம்மிபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இரு பேருந் துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கம்பெனி பேருந்தில் பயணம் செய்த பனியன் கம்பெனியை  சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்தில் பயணித்த  பொதுமக்கள் என 27 பேர் காயமடைந்தனர். இவர்களை, விபத்து நடந்த பகுதியில் பொது மக்கள் மீட்டனர். ஆம்புலன்ஸ்  வாகனம் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து  பல்ல டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

பருத்தி ஏலம்

தாராபுரம், நவ.15- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறை முக பருத்தி ஏலம் நடைபெற் றது. 360 விவசாயிகள் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.  இதில், அதிக பட்ச விலையாக குவிண் டால் ஒன்றிற்கு ரூ. 10 ஆயி ரத்து 300க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 7 ஆயிரத்து  550க்கும். சராசரி விலையாக ரூ. 8 ஆயிரத்து 750க்கும் விலை போனது. மொத்தம் 3259 மூட்டைகள் 1 ஆயி ரத்து 69 குவிண்டால் பருத்தி ரூ. 90 லட்சத்து 24 ஆயிரத்து 478க்கும் விற்பனையானது.

மகன் இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

அன்னூர், நவ.15- அன்னூரில் சிகிச்சைக்காக சென்ற மகன் இறந்த சோகம்  தாங்காமல், தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்ச பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி இவரது மகன் சங்கீத் குமார் (22), சொந்தமாக டிராவல்ஸ் ஓட்டி வந்த நிலையில்,  கடந்த நவ.7 ஆம் தேதியன்று அவருக்கு முதுகுவலி ஏற்பட் டுள்ளது. இதனையடுத்து அன்னூரில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக தாயுடன் சங்கீத் குமார்  சென்றிருக்கிறார். இதையடுத்து அவருக்கு முதுகு வலிக்கு சிகிச்சை அளித்த போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு, அதன்பின்  மாரடைப்பும் ஏற்பட்டு, மருத்துவமனையில் தாய் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மன முடைந்து காணப்பட்டு வந்த அவரது தாய் தங்கமணி, மகன்  இறந்ததால் துக்கத்தில் விரக்தியில் இருந்துந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விவசா யத்திற்கு பயண்படுத்தும் குருணை மருந்தினை குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே மகன் சங்கீத் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  அவரது தாய் தங்கமணி காவல் துறையினரிடம், தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சை முறையால் தான் தனது மகன் உயிரிழந்ததாக புகார் கூறிய நிலையில், தற் போது அவரும் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூனையை விழுங்கிய  10 அடி  நீளமுள்ள மலைப்பாம்பு

பொள்ளாச்சி, நவ.15- பொள்ளாச்சி அருகே பூனையை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுபகுதியில்  மலைப் பாம்பு, நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன் போன்ற கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடிப்பதற்காக வனத்துறை மூலம் பாம்பு பிடிப்பதில் நன்கு பயிற்சி பெற்ற தன்னார்வலர் அமைப்பு மூலம் பாம்புகளை பிடிக்க வனத்துறை அனுமதி  அளித்துள்ளது. ஆனைமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதி யில் உள்ள வீடு மற்றும் தோட்டங்களில் பாம்புகள் தென் பட்டால் உடனடியாக, இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால் பாம்பை சாதுர்யமாக பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்து, வனப்பகுதியில் விடப்படுகிறது. இந்நிலையில், திங்களன்று இரவு ஆழியார் பொதுமக்கள்  வசிக்கும் பகுதியில் பூனை ஒன்று திடீரென காணவில்லை. வீட்டின் உரிமையாளர் பூனை தேடியபொழுது 10 நீள முள்ள மலைப்பாம்பு பூனை விழுங்கிய நிலையில் இருந் துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு வந்த பாம்பு பிடிக்கும் தன்னார்வலர் அமைப்பினர் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதன்பின் வனத்துறையினர் மலைப் பாம்பை ஆழியார் அடர் வனப்பகுதியில் விட்டனர்.

போக்குவரத்தை எளிமைப்படுத்த செயலி அறிமுகம்

கோவை, நவ. 15 - கோவையில் போக்குவரத்து நிலவரம், நெரிசல் மற்றும் மாற்று பாதைகள்  குறித்து  அறிந்து கொள்ளும் வகையிலான roadEase  என்ற செல்போன் செயலியை மாநகர காவல்  ஆணையர் அறிமுகம் செய்து வைத்தார். கோவையில் நாளுக்கு நாள் வாகனங் களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனுடைய நகரின் பல்வேறு பகுதிகளில்  மேம்பால பணிகள், சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அலு வலக நேரங்களில் நகரின் பல்வேறு பகுதி களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு வருகிறது. இந்த நிலையில் கூகுள் மேப்  செயலியில் போக்குவரத்து நிலவரங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் தகவல்களை அப்டேட் செய்யும் வகையில் roadEase என்ற செயலியை மாநகர காவல் ஆணையர்  அறிமுகம் செய்து வைத்தார். எங்கெங்கு பணிகள் நடைபெறுகிறது,  எந்த  பகுதியில் மாற்றுப் பாதையில் எடுக்க  வேண்டும் என்பது குறித்து இதில் அறிந்து  கொள்ளலாம். இந்த திட்டத்தின் படி காவல்துறையில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு இந்த  செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இது ஏற்கனவே அறிமுகப் படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது கோவை மாநகர காவல் துறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. செயலி குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும், முகப்பு பக்கம் குறித்தும் மாநகர காவல்துறை ஆணையர் செய்தியாளர்கள் மத்தியில் விவரித்தார். 

பொய் வழக்கில் இருந்து  சிபிஎம் தலைவர்கள் விடுவிப்பு

தருமபுரி, நவ.15- ரயில்வே சாலையை சீரமைக்ககோரி நடைபெற்ற போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைவர்கள் மீது பதியப்பட்ட வழக்கிலிருந்து, பொய் வழக்கு என கூறி தருமபுரி நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி விடு வித்துள்ளது.  தருமபுரி அரசு மருத்துவமனையிலிருந்து, தருமபுரி ரயில் நிலையம்  வரை அரை கிலோமீட்டர் தூரத்திற்கு  ரயில்வேக்கு  சொந்தமான தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக டீச்சர்காலனி, இந்திராநகர், வெண்ணாம்பட்டி, வெண்ணாம் பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏ.ஆர்.கோட்ரஸ், குள்ள னூர், மாந்தோப்பு, நியூகாலனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்க ளைச் சார்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை  குண்டும், குழியுமாக மாறியதால் கடந்த இரண்டு வருடங் களாக வாகனம் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற் குள்ளாகினர். எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும். மேலும்  தருமபுரி ரயில் நிலையத்திற்கு அடிப்படை வசதிகளை  செய்து  மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தருமபுரி நகரக்குழு சார்பில் கடந்த ஓர் ஆண் டுக்கு முன்பு இயக்கம் நடைபெற்றது.  இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸா மேரி, நகரசெயலாளர் ஆர்.ஜோதிபாசு மற்றும் கே.சுசிலா நிர்மலா ராணி ஆகியோர் மீது தருமபுரி நகர காவல்துறை யினர் பொய்வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு தருமபுரி நீதி மன்றத்தில் நடந்துவந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்றும், இந்த வழக்கில் இருந்து 5 பேரை  விடுவித்து நீதிபதி தீர்ப்பு  வழங்கினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் இயக்கத் தால், தருமபுரி ரயில்நிலையத்திற்க்கு செல்லும் சாலை சீர மைக்கப்பட்டு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி

உதகை, நவ.15- நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி திங்களன்று நடை பெற்றது. இதில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண் டனர். தமிழ்நாடு அரசின் பொது நூலக துறையின், நீலகிரி மாவட்ட மைய நூல கம் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார் பில் திங்களன்று “தேசிய நூலக வார விழா” மாவட்ட மைய நூலகத்தில் நடை பெற்றது. இதையொட்டி புத்தகக் கண் காட்சி மற்றும் “நீலகிரி மண்ணும் மக்க ளும்” என்ற தலைப்பில் ஆவண படக்  கண்காட்சி நடைபெற்றது. இதற்கு  நூலக வாசர் வட்ட தலைவர் அமுத வல்லி தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலகர் ரவி முன்னிலை வகித் தார். குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பிலிப் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரிக்ஸ் பள்ளி உட்பட அரசு மற்றும் தனியார் பள்ளி  மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் அறிவியல், வரலாறு, மருத்துவம், புதினம், உளவி யல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. வாசிப்பு பழக்கத்தை இளைய தலை முறையிடம் கொண்டு சேர்க்க வேண் டும் என்பதே இந்த கண்காட்சியின் முக் கிய நோக்கம் என்று நூலக பணியாளர் கள் தெரிவித்தனர். மேலும்,  “நீலகிரி மண்ணும், மக்களும்” என்ற தலைப்பில்  நடந்த ஆவணப்படக் கண்காட்சியை மாணவ, மாணவிகள் கண்டு ரசித்த னர். இதற்கான ஏற்பாடுகளை உதகை ஆவண காப்பக நிறுவனர் மதிமாறன் செய்திருந்தார். மேலும் அடுத்து ஒரு வாரம் கவியரங்கம், கதை சொல்லி, நாடகம், வாசிப்பை நேசிப்போம், கருத் தரங்கம், பரிசளிப்பு போன்ற நிகழ்ச்சி கள் நடைபெற உள்ளது என தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கனரா வங்கி மேலாளர் பிரேம்குமார், நூலக  ஆய்வாளர் வசந்த மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரேசன் அரிசி பறிமுதல்

தருமபுரி, நவ.15- தருமபுரி மாவட்ட வழங் கல் ஜெயக்குமார் தலை மையில் அதிகாரிகள் ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப் போது, காரிமங்கலம் பொம்மஅள்ளி கூட்ரோடு மந்தை வீதி பகுதியில் சாலை யோரம் புதரில் மூட்டைகள் கிடந்தது. அந்த மூட்டை களை திறந்து பார்த்தபோது, ரேசன் அரிசி இருப்பது தெரிந்தது. ரேசன் அரிசியை  அந்த பகுதியில் அடையா ளம் தெரியாத நபர்கள் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.