அவிநாசி, அக்.11- அவிநாசியில், வாழை விவசாயத் தில் பெரும் பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ள நிலையில், உடனடியாக அரசு தலையிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்திய நிலையில், புதனன்று வாழை தோட்டத்தில் அதி காரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவிநாசி ஒன்றியம், தண்டுக்காரன் பாளையம் ஆதராம்பாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற் றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள் ளன. இந்த நிலையில் ஜெயின் கம்பெனி வாழைக்கன்று பயிரிடச் செய்தால் 30 கிலோ எடை வரை வாழைத்தார்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பி விவசாயிகள் பயிரிட எடை குறைவாகவும், பாதி பழங்களா கவும் மீதி பிஞ்சுகளாகவும் இருந்துள் ளன. இந்த வாழைக்காய்களை வியா பாரிகளும் விலை கொடுத்து வாங்க மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் ஜெயின் கம்பெனி நிறு வனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். இழப்பீடு தொகை கொடுக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்து வந்துள் ளனர். இதனை அடுத்து வட்டாட்சியர் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயி கள் ஜெயின் கம்பெனி நிறுவனத்தினர் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். இதில் வாழைகளை ஆய்வு மேற் கொண்டு ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப் பிப்பதாக முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன் இழப்பை சந்தித்திருக்கும் விவசாயிக ளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு நிதி இழப்பீடு வழங்க வேண்டும் வலியு றுத்தியிருந்தார். இந்நிலையில் திருச்சி யில் இருந்து வாழை ஆராய்ச்சி அதிகாரி கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று மண், வாழை யிலை, வாழைக்காய், வாழைக்கன்று போன்றவைகளை ஆய்வுகூடத்திற் காக எடுத்துச் சென்றனர்.