districts

img

சமயசங்கிலி கிராமத்தில் அதிகாரிகள் முகாம்

பள்ளிபாளையம், ஜன.9- பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு களை கொள்முதல் செய்ய பள்ளிபாளையம் அருகே உள்ள  சமயசங்கிலி கிராமத்தில் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். தைப்பொங்கலை முன்னிட்டு, தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சக்கரை, கரும்பு மற்றும் ஆயிரம்  ரூபாய் பணம் உள்ளிட்டவை வழங்கப்படும் என அறிவித்திருந் தது. அதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் தமி ழக முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு, திங்களன்று முதல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள சமய சங்கிலி கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக வேளாண் கூட்டுறவு சங்க அதிகாரிகள், சமயசங்கிலி கிராமத்தில் முகா மிட்டுள்ளனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறி முறைகளின்படி கரும்புகளை கொள்முதல் செய்வதற்காக, விவசாயிகளின் கரும்பு தோட்டத்தில் கரும்புகளை தரம்  வாரியாக ஆய்வு செய்து கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும், பொங்கலையொட்டி பொங்கல் கரும்புகளை வியா பாரம் செய்யும் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் அதிக ளவு சமயசங்கிலி கிராமத்தில் முகாமிட்டு கரும்புகளை  வாங்கி செல்கின்றனர். பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால், செங்கரும்புகள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடை பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அருகில் உள்ள களியனூர் கிராமத்தில் 50 ஆயி ரம் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ள நிலையில், அரசு தங்களை  கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும், தங்கள் பகுதியில் விளையும் கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டு மென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.