districts

பாதை கேட்டு பட்டியலின மக்கள் போராட்டம் 10 நாட்களுக்குள் தீர்வை எட்டுவதாக அதிகாரிகள் உறுதி

ஈரோடு, அக்.28- சாலையின்றி முடக்கப்பட்ட முத்துக்கவுண்டன் புதூர் பட்டிய லின மக்கள் தொடர் போராட் டத்தை அடுத்து, தற்சமயம் மாற்று  வழியை ஏற்படுத்திக்கொடுத் துள்ள அதிகாரிகள், பத்து நாட்க ளுக்குள் நிரந்தர தீர்வை எட்டப்ப டும் என அதிகாரிகள் உறுதி அளித்த னர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பட்லூர் கிராமம், முத்து கவுண்டன்புதூரில் வசித்து வரும்  பட்டியலின மக்களுக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத் துறை மூலம். நில எடுப்பு செய்து  வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட் டது. அப்போது அக்குடியிருப் பிற்கு பாதை ஒதுக்கப்படவில்லை. தற்காலிகமாக ஓடை புறம்போக் கில் பாதை அமைத்து வெளியில் சென்று வந்தனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த அம்மாசை  என்பவர் அப்பகுதி மக்கள் தற் காலிகமாக  ஓடை புறம்போக்கில் பாதை அமைத்து பயன்படுத்தி வந்த நிலத்தை தங்களுடைய பட்டா நிலம் என்று கூறி கடந்த மூன்று நான்காண்டு காலமாக வண்டல் மண் எடுத்து விற்பனை செய்து வந்தார். பின்னர், பட்டிய லின மக்கள் பயன்படுத்தி வந்த மயா னத்திலும் மண் எடுக்க ஆரம் பித்தார். இவ்வாறு மயானத்தில் மண் அள்ளினால் மயானத்திற்கு எங்கே போவோம் என்று பட்டிய லின மக்கள் தடுத்தனர். இதல் ஆத் திரமடைந்த அம்மாசை நான்கு தலைமுறைகளாக அம்மக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை ஜேசிபி மூலம் குழி தோண்டி தடுத்து விட்டார்.  இதனால், பள்ளிகள், கல்லூரிகள், சந்தை  மற்றும் ஊருக்கும், பேருந்து நிறுத்தத்திற்கும் செல்ல சுமார் 4  கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத னால், குழந்தைகளின் கல்வியும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி யுள்ளது. வாழ்வாதாரம் அனைத் தும் பாதிக்கப்பட்டது.  இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் ஆதிதிராவிடர்  நலத்துறை மூலம் போர்க்கால அடிப்படையில் நில எடுப்பு செய்து  சாலையாக மாற்றி அம்மக்களின் எதிர்கால வாழ்க்கையை பாது காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதனை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் அலட்சியம் செய்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள்  அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத் தில் அக்.25 மற்றும் 26 ஆகிய  இரண்டு நாட்கள் தஞ்சமடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களையும், எதிர் தரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. வேறு வழி கிடைக்காத நிலையில், ஞாயி றன்று வீடுகளில் கருப்பு கொடி  ஏற்றினர். வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அரசு  அளித்த ஆவணங்களுடன் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல தயாரானார்கள். இதனை யறிந்த காவல் துறையினர் அவர் களைத் தடுத்து நிறுத்தி வாக னத்தைப் பறிமுதல் செய்வோம் என்று அச்சுறுத்தினர். பின்னர், குழி  தோண்டிய சாலையைச் சரி செய்து  மீண்டும் பயன்பாட்டிற்கு விடுகி றோம் என்று காவல் துணை கண் காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் முயற்சித்தனர். பின்பு காவல் துணை கண்காணிப் பாளர் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் தலைமை யிலான குழுவினர் நடப்பதற்கும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் வகையிலான மாற்று வழியைக் காட்டியுள்ளனர். மேலும், 10 நாட்க ளுக்குள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித் தனர். இதனை ஏற்று அப்பகுதி மக் கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆத ரவாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தாலுகாச் செயலாளர் ஆர்.முருகே சன் ஆகியோர் உடனிருந்தனர்.   சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஆர்.கோமதி மற்றும்  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனி சாமி ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக் குச் சென்று ஆதரவு தெரிவித்த னர்.