நாமக்கல், பிப்.16- பள்ளிபாளையத்தில் கட்டப்பட்டு வந்த மேம்பாலப் பணி கள் நிறைவடைந்த நிலையில், விரைந்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச்செங் கோடு சாலையில், ராசிபுரம் –திருச்செங்கோடு - ஈரோடு சாலை யின் விரிவாக்கப்பணி நடைபெற்று வந்தது. இதில் தோக்க வாடியிலிருந்து ஆலாம்பாளையம் வரை நான்கு வழிச் சாலையானது கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தி லிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட் டது. மேலும், ஆலாம்பாளையம் முதல் பள்ளிபாளையம் வரை 4 கிலோமீட்டர் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வந் தது. அரசின் நிதி பற்றாக்குறையினால் சிறிது காலம் பணியில் தொய்வு ஏற்பட்டது. அப்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையினாலும், நெடுஞ்சாலைத் துறையினரின் ஒத்துழைப்புடனும் மேம்பாலப் பணி கால அவ காசத்திற்குள் நிறைவு பெற்றது. இம்மேம்பாலம் எப்போது பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இப்பாலம் பயன்பாட்டிற்கு வந் தால் பள்ளிபாளையத்தில் போக்குவரத்துக்கு நெரிசல் மிக வும் குறையும். சேலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற் றும் பல்வேறு அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பாலத் தில் பொருத்தப்பட்ட தூண்களின் உறுதித் தன்மை மற்றும், கடினத்தன்மை குறித்து நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். ஓரிரு நாளில் அனைத்து ஆய்வுகளையும் முடித்துக் கொண்டு அதி விரை வாக மேம்பாலத்தை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்த னர்.