நாமக்கல், மார்ச் 6- குண்டும் குழியுமான சாலையை சீர் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி நடைப யணம் மேற்கொண்ட நிலையில், உடன டியாக அதிகாரிகள் தார்ச்சாலை அமைக்கிறோம் என எழுத்துப்பூர்வ மான உறுதியளித்தனர். திருச்செங்கோடு அருகே எலச்சிபா ளையம் அகரம் கிராமம் வேலங்காடு அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் உள்ள தார்ச்சாலை 10 வருடத்திற்கும் மேலாக சீரமைக் காததால் குண்டும் குழியுமாக உள்ளது. அவசரத் தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் கூட உரிய நேரத்தில் வர முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இப்பகுதி மக்கள் தொடர்ந்து தார்ச் சாலை வசதி வேண்டும் என கேட்டு, கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், புதிய தார்ச்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் கவுன்சி லர் சு.சுரேஷ், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கிட்டுசாமி தலைமையில் பொதுமக்கள் முருகன் கோவில் பகுதி யில் இருந்து நடைபயணப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் லோகமணிகண்டன் மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, உடனடியாக சாலை அமைப்பதற்கான முன்னுரிமை வழங் குகிறோம் என்றனர். இதனையேற்று, நடை பயணப் பிரச்சாரம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் கே.எஸ்.வெங்கடா சலம், அகரம் வார்டு உறுப்பினர் த.பூங் கொடி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஆர். ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.