திருப்பூர், டிச. 6 -. திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட 9ஆவது வார்டு மற்றும் 15ஆவது வார்டுக்கு உட்பட்ட அங்கேரிபாளை யம், கிழக்கு வீதி துண்டுக்காடு, ஏ. எஸ்.எம்.காலனி, வெங்கமேடு, அவி நாசி கவுண்டம்பாளையம், ஸ்ரீநகர், ஏவிபி லேஅவுட் பகுதிகளில் 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த காலத்தில் செட்டிபாளையம் ஊராட்சி நிர்வா கம் செயல்பட்ட போது 50க்கும் மேற் பட்ட இடங்களில் பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு மேல் நிலை தொட்டிகள் மூலம் இரண்டா வது திட்டகுடிநீர் விநியோகம் செய் யப்பட்டு வந்தது. முன்று மாத கால மாக மேற்படி பகுதிகளில் உள்ள பொது குடிநீர் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து மக்களுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும்.
மூன்றாவது திட்டத்தில் வீட்டு இணைப்புகளுக்கு வரும் தண்ணீர் பத்து நாட்களுக்கு ஒரு முறை வரும் நிலைமை உள்ளது. நான்கு நாட்க ளுக்கு ஒரு முறை வீட்டு இணைப்புக ளுக்கு தண்ணீர்கிடைத்திட வலியு றுத்தியும், முதலாவது மண்டல அலு வலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட் டது. இந்த நிலையில், செவ்வாயன்று காலை 9 மணி அளவில், மாநகராட்சி குடிநீர் உதவி பொறியாளர் செந்தில் கணேசன், குழாய் ஆய்வாளர் சுகு மார் நேரில் வந்து மார்க்சிஸ்ட் கட்சி நிர் வாகிகளிடமும், பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். புதன்கிழமை காலை இப்பிரச்ச னைக்குத் தீர்வுகாணப்படும் என அதி காரிகள் கூறியதை அடுத்து, போரட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட் டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கேரிபாளையம் பகுதி கிளைகள் சார்பில் மாநகராட்சி அதி காரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. கிளைச் செயலாளர்கள் மனோகரன், எஸ்.ராஜேஷ், பி.கதிர்வேல் மற்றும் ஆர்.என்.ரத்தினசாமி, என்.பாலசுப்ர மணியம், எம்.பத்மநாபன், கே. வினோத், எம்.ரமேஷ், ஏ.ராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.