தருமபுரி, டிச.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மற்றும் விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் வெண் மணி தியாகிகள் நினைவு தினம் எழுச்சியோடு அனுசரிக்கப்பட்டது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் அருகே வெண்மணி தியாகி கள் தினத்தை முன்னிட்டு சிஐடியு சார்பில் வெண்மணி தியாகி களுக்கு வீரவணக்கம் செலுத் தினர். இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.நாகராசன், மாவட்ட செயலாளர் பி.ஜீவா, பொருளாளர் ஜெயக்குமார், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், செய லாளர் முரளி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.
கோவை
கோவை - பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் நடைபெற்ற வெண்மணி தியாகி தினக் கூட்டத் திற்கு, பகுதிக் கிளைச் செய லாளர் கிருஷ்ணன் தலைமை வகித் தார். இந்நிகழ்வில், தியாகிகள் ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில குழு உறுப்பினர் ஏ. ராதிகா, கோவை மாவட்ட செயற் குழு உறுப்பினர் கேஅஜய்குமார், தமுஎகச மாவட்ட தலைவர் தி.மணி உள்ளிட்டோர் வெண்மணி தியாகி கள் நினைவு தின உரையாற்றினர். மாதர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிமணி, கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, கண்ணகி ஜோதிபாசு உள்ளிட்ட திராளனோர் பங்கேற்றனர். கோவை, வடசித்தூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங் கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் வெண்மணி நினைவு தினம் அனுசரிக்கப்பட் டது. வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட் டது. இதில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் வி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்ற னர்.
ஈரோடு
கீழ் வெண்மணி நினைவு தின கொடியேற்று விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் எம்.அண்ணா துரை நிகழ்ச்சிக்கு தலைமை வகித் தார். மூத்த தோழர் கே.துரைராஜ் செங்கொடியை ஏற்றி வைத்தார். வெண்மணி நினைவுகளை பற்றி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், நகர செயலாளர் பி.சுந்தர ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம்
வெண்மணி தியாகிகளின் நினைவு தின கொடியேற்று நிகழ்ச்சி சேலம் ரயில்வே ஏற்று மதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் சேலம் மார்க்கெட் கூட்செட் முன்பு பொரு ளாளர் பி.சக்திவேல் தலைமை யில் நடைபெற்றது. தமிழ்நாடு சுமைப்பணி தொழி லாளர் சம்மேளன தலைவர் ஆர். வெங்கடபதி செங்கொடியினை ஏற்றி வைத்து வெண்மணி தியாகி களை நினைவு கூர்ந்து பேசினார். இதில், 300க்கும் மேற்பட்ட சுமைப் பணி தொழிலாளர்கள் பங்கேற் றனர். இதேபோன்று, மெய்யனூர் போக்குவரத்து பணிமனை முன்பு வெண்மணி நினைவு தினத்திற்கு, சிஐடியு போக்குவரத்து மண்டல தலைவர் கே.செம்பன் தலைமை தாங்கினார். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார் வெண்மணி தின கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதில், போக்குவரத்து அரங்கத்தி னர் திரளானோர் பங்கேற்றனர். பொருளாளர் சேகர் நன்றி கூறி னார்.