districts

img

காவலர் வீரவணக்க நாள் கடைபிடிப்பு

ஈரோடு, அக்.21- ஈரோட்டில் காவலர் வீரவணக்க நாள் வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக அக்டோ பர் 21 நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை மைதா னத்தில் நினைவு நாள் கவாத்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வி.சசிமோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை ஆட்சியர், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர்கள், தலைமையிடம், பெண்கள் மற்றும் குழந்தை கள் தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் பிரிவு, காவல் துணை  கண்காணிப்பாளர்கள் ஈரோடு நகரம் மற்றும் ஆயுதப்படை ஆகியோர் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் காவல்துறை சார்பில் 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.