districts

img

மருத்துவர் ராஜேந்திரன் நினைவு தினம் அனுசரிப்பு

கோபி, மே 19- கோபியில் மருத்துவர் ராஜேந்திர னின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்  மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அனுசரிக்கப் பட்டது. ஈரோடு மாவட்டம், கோபியில் மருத்துவர் எம்.ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி இணைந்து, ஏழை, எளிய மக்களுக் காக குறைந்த கட்டணத்தில் மருத்து வமனை அமைத்து, மருத்துவ சேவை யாற்றி வந்தனர்.  குறிப்பாக, கொரோனா  காலத்தில் நோய் தொற்று அச்சத்தில்  இருந்த அனைத்து தரப்பு மக்களுக்கும்,  சிகிச்சை அளித்து மருத்துவ சேவை யாற்றினார். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ராஜேந்திரன் உயிரிழந் தார்.  இதனைத்தொடர்ந்து, பொதுவாழ் விலும், மருத்துவசேவையிலும் மக்க ளுக்காக அரும்பணியாற்றி இறந்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரும், மருத்துவருமான எம்.ராஜேந்திரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் அனு சரிக்கப்படுவது வழக்கம். அந்த வகை யில், அவரது மூன்றாம் நினைவு தினம்,  கோபி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத் தில் சனியன்று அனுசரிக்கப்பட்டது.   நிகழ்விற்கு, சிபிஎம் தாலுகா கமிட்டிச் செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். முன்னாள் தாலுகா  கமிட்டிச் செயலாளரும், வழக்குரைஞ ருமான நந்தகுமார் முன்னிலை வகித் ்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனுசாமி, தோழர் மருத்துவர் ராஜேந்திரனின் மனைவி ராஜலட்சுமி, மகன் மருத்துவர் சதிஷ், அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்க சார்பில்  வி.ஆர்.மாணிக்கம், மாதர் சங்கச் செய லாளர் மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டு மருத்துவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.