districts

img

தியாகிகள் தினம் கடைப்பிடிப்பு

திருப்பூர், ஜன.19 - ஜனவரி 19 ஆம் தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு சிஐடியு, தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில்  பல்லடம் மற்றும் காங்கேயத்தில் வீர வணக்க நிகழ்ச்சி கடைப்பிடிக்கப் பட்டது. நவீன தாராளமய கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்தும், 1982 ஜன வரி 19 அன்று நடத்தப்பட்ட பாரத்பந்த் போராட்டத்தின் போது, தஞ்சாவூர் மாவட்டம், திருமெய்ஞானம் தோழர் கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்  ஆகியோர் காவல்துறை துப்பாக்கி சூட் டில் உயிர் தியாகம் செய்தனர். விவசாயி கள் தொழிலாளர் ஒற்றுமையை உணர்த் தும் இவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் தியா கிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  அதன் அடிப்படையில் வியாழ னன்று காலை 11 மணிக்கு பல்லடத்தில் உள்ள விவசாயிகள் சங்க மாவட்ட அலு வலகத்தில் தியாகிகள் நினைவு ஸ்தூ பிக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு  நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிஐடியு  மாவட்ட துணைத் தலைவர் கே.உன்னி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஆர்.குமார் முன்னிலையில் விவ சாயிகள் சங்க மாநிலத் துணைத்தலை வர் பி.பெருமாள் தியாகிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்ட துணைத்தலைவர் ஜி.சுந்த ரம் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜி.சம் பத், விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன், பொருளா ளர் அ.தண்டபாணி, பல்லடம் ஒன் றிய தலைவர் கே.வி.சுப்பிரமணி, ஒன் றிய செயலாளர் வை.பழனிசாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செய லாளர் ஆர்.பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கேயம் காங்கேயம் அரசுப் பேருந்து பணி மனை கிளை முன்பாக சிஐடியு சார் பில் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப் பட்டது. சிஐடியு போக்குவரத்து ஊழியர்  சங்கக் கிளைச் செயலாளர் அசோக்கு மார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டக்குழு உறுப்பினர் கே.திருவேங்கட சாமி,  அரசுப் போக்குவரத்து ஊழியர்  சங்க திருப்பூர் மண்டல நிர்வாகி வின் சென்ட் ஆகியோர் தியாகிகள் தினத்தை  நினைவு கூர்ந்து உரையாற்றினர். காங் கேயம் கிளைப் பொருளாளர் காளி ராஜ் நன்றி கூறினார்.