districts

img

சென்னையில் அக்.17 ஆம் தேதியன்று போராட்டம்

சேலம், செப்.19- சென்னையிலுள்ள ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை கிராமப்புற இயக்குநர் அலு வலகம் முன்பு அக்.17 ஆம் தேதியன்று போராட்டம் நடைபெற உள்ளதென, கிராமப் புற ஊராட்சிகளின் ஊழியர் சங்கம் அறிவித் துள்ளது. தமிழ்நாடு கிராமப்புற ஊராட்சிகளின் ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாநிலக்குழு கூட்டம், சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் வியாழனன்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணி, மாநிலப் பொருளாளர் கே.ரங்கராஜ், மாநில நிர்வாகி கள் எஸ்.ஏ.சந்தானம், வீராசாமி, எஸ்.கே. தியாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழ்நாடு 12,525 கிராமப்புற ஊராட்சிகளில் பணியாற்றி வருகின்ற தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் தொட்டி பராமரிப்பாளர் ஆகியோருக்கு கால முறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பயன்களை வழங்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய கிராமப்புற ஊராட்சி பணியாளர்களுக்கு அறிவித்த மூன்று மாத ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 15.10.2000-த்திற்கு பின்னர்  புதிய நியமனம் கூடாது என்ற தடை உத்த ரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்.17 ஆம்  தேதியன்று சென்னையிலுள்ள ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை கிராமப்புற இயக்குநர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.