கோவை, மே 27- கோவை போலீசார் இனி ஆட்டோவில் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். கோவை மாநகர போலீ சார் ரோந்து செல்வதற்காக இருசக்கர வாகனம், ஸ்கூட் டர்கள், ஜீப்கள் உள்ளன. இந்நிலையில், குற்ற சம்ப வங்களை தடுப்பதற்காக மாநகரில் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது போலீசாருக்கு சிறிய தெருக்களில் கூட ஆட்டோவில் சென்று ரோந்து செல்ல வசதியாக புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய 2 பேட்டரி ஆட்டோக்கள் வாங்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு ஆட்டோ முழுவதும் மூடிய நிலையிலும், மற்றொன்று ஓட்டுநர் அமரும் பகுதி மட்டும் மூடிய நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நவீன பேட்டரி ஆட்டோவில் மூலம் போக்குவரத்தை சீர் செய்ய ஒலிப்பெருக்கி, சைரன்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஆட்டோவில் உங்கள் பாதுகாப்பே, எங்கள் குறிக்கோள், அவரச போலீஸ் எண், பெண் கள் புகார் தெரிவிக்கும் எண், மாணவர் கள், குழந்தைகள் புகார் எண்கள் தெரி விக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த போலீஸ் அதிகாரிகள் கூறு கையில், போலீசாரின் ரோந்து பணிக்காக வாங்கப்பட்ட இந்த பேட்டரி ஆட்டோவில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ வரை இயக்க முடியும். சிறிய தெருக்களில் கூட இரவு நேரத்தில் ரோந்து சென்று குற்றங் களை தடுக்க உதவியாக இருக்கும், என் றனர்.