சேலம், பிப்.6- எப்ப சார் எங்க பகுதிக்கு கரண்ட் வரும் என 40 ஆண்டுகளாக மின் சாரம் இல்லாமல் ஏங்கி வரும் சேலம் பகுதி மக்களின் துயரத்தை அகற்ற, மின்வாரியத்தை கண் டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கிழக்கு மாநகர பகுதி யைச் சேர்ந்த மூனாம் கரடு என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். 40 ஆண்டுகளாக இந்த பகு திக்கு மின்சார வசதிகள் செய்து தரப்படவில்லை. பலமுறை ஊர் பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரசு தரப்பில் முறையிட்டும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்து தான் நேரில் வந்து இடத்தை பார்வையிட்ட பிறகு மின் சாரம் அளிக்க ஏற்பாடு செய்கிறேன் எனக் கூறியும், இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மின்சாரம் வழங் காமல் அலைகழிக்கும் மாவட்ட நிர் வாகம் மற்றும் மின்வாரியத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கிழக்கு மாநகர குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.பெரியசாமி தலைமை தாங்கினார். அப்போது, எப்ப சார் எங்க ஊருக்கு கரண்ட் வரும் என்கிற பதாகைகளோடு நூதன முறையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆர்ப்பாட் டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக் களை அளித்தனர். இதில், வாலிபர் சங்க மாநகர கிழக்கு செயலாளர் விமல்ராஜ், தலைவர் கோபி ராஜ், மாவட்ட துணை செயலாளர் வீர மணி, பொருளாளர் எம்.தமிழ் செல்வன் உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.