districts

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 டைபாய்ட் தொற்றுக்கு புதிய சிகிச்சை 

சால்மனெல்லா (salmonella) எனும் நுண்கிருமியால் டைபாய்ட் காய்ச்சல் ஏற்படுகிறது.இந்தியாவில் 4.5 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் 8930 இறப்பு ஏற்படுகிறது என்றும் அண்மைக்கால ஆய்வு கூறுகிறது. இந்த நுண்கிருமி பல்வேறு மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி பிழைத்துக் கொள்கிறது.இதற்குக் காரணம் இதன் மேற்படலத்திலுள்ள புரதம் (A) எனும் பொருளே. ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கிருமியின் உட்புறம் செல்லாதாவாறு இது தடுத்துவிடுகிறது.எனவே இதை நீக்கிவிட்டால் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்கின்றன என ஒரு ஆய்வில் தெரிய  வந்துள்ளது. எலிகளில் புரதம் (A) நீக்கப்பட்ட சல்மனெல்லா கிருமி தொற்று ஏற்படுத்தி பின் செப்டாசிடைம் எனும் ஆன்டிபயாட்டிக் மருந்தை செலுத்தியபோது தொற்று குணமாவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறையை மற்ற நுண்கிருமி தொற்றுகளுக்கும் பயன்படுத்தலாம் என்கிறார் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழக நுண் உயிரியல் மற்றும் செல் உயிரியல் துறைப் பேராசிரியர் தீப்ஷிக்கா சக்ரவரத்தி. 

2 பனிப்பாளங்களுக்கு அடியில் ஆறு

அண்டார்டிக்காவிற்கு அடியில் ஒரு ஆறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 460கிமீ நீளமுள்ள இந்த ஆறு தேம்ஸ் நதியை விட நீளமானது. பருவநிலை வெப்ப மாதல் அதிகரிக்கும்போது பனி உருகுவதை இந்த ஆறு விரைவுபடுத்துகிறதாம். பனிப்பாளங்கள் மிதப்பதையும் உருகுவதையும் இந்த ஆறு பாதிக்கிறது. பனிப்பாளங்களின் அடியில் இதற்கு முன் கருதப்பட்டதை விட நீரின் ஓட்டம் அதிகமாக உள்ளது. வெப்ப நிலை மாறுதல்களினால் பனிப்பாளங்கள்  பாதிக்கப்படுவதை இது அதிகப்படுத்துகிறது.

3 மூன்றாம் கை  புகை தொற்று

புகை பிடிப்பதனால் வெளியாகும் துகள்கள் மேற்பரப்பில் தங்கிவிடுகின்றன. இது மற்றவர்கள் உடலில் படும்போது தோல் நோய்கள் உண்டாகின்றன.இதை மூன்றாம் நபர் புகைபிடித்தல் (Thirdhand smoke) என்கிறார்கள். டிஎச்எஸ் (THS) எனப்படும் இந்த துகள்களுடன் மிக அதிக தொடர்பு ஏற்படும்போது   டெர்மாடிடிஸ்,சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களை உண்டாக்கும் மூலக்கூறுகள் நம் உடலில் அதிகரிக்கின்றன. புற்று நோய்,இதய நோய்,அதேரோசிஸ் எனப்படும் இரத்தக்குழாய்கள் தொடர்பான நோய் போன்ற பிற நோய்களுக்கும் இது இட்டுச் செல்லலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

4 ரோபோ அறுவை சிகிச்சை 

ரோபோ உதவியுடன் நடைபெறும் அறுவைச் சிகிச்சைகள் வழக்கமான அறுவை முறையை விட பன்மடங்கு சிறப்பானது என்கிறார்கள் பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள். இந்த முறை யானது உடல்நலத் துறையில் புரட்சிகரமானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.அது மேம்பட்ட முடிவுகளை தருகிறது; நோயாளிகள் குறைவான வலியையே உணர் கிறார்கள். நோய்வாய்ப்பட்டவர்கள் தாங்கள் செய்து வந்த  பணிக்கும்  வழக்கமான நடைமுறைக்கும்  விரைவாக திரும்ப முடிகிறது என்கிறார் ஆஸ்ரா குழுமத்தின் நிறுவனர் மருத்துவர் ஜே.ஹையர்மாத்.

5 சமையலில் கலக்கும் நுண் பிளாஸ்டிக் 

டெப்ளான் பூசப்பட்ட எண்ணெய் சட்டியில் சமைக்கும்போது இலட்சக்கணக்கான நுண் பிளாஸ்டிக் துகள்கள உணவில் கலப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இப்படிப்பட்ட சட்டியில் ஏற்படும் மிகச் சிறிய கீறல்கள் கூட 9100/ பிளாஸ்டிக் துகள்களை வெளிவிடுகிறது.உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய பிஎப்ஏஎஸ் (PFAS) எனும் வகையில் அடங்கும் பாலிடெட்ராபுளோரோ எத்திலீன்தான் டெப்ளான் என அழைக்கப்படுகிறது. 

6 குவாண்டம் கணினியில் சீனா புதிய சாதனை 

கிறார்கள். நாம் பயன்படுத்தும் சாதாரண கணினி, பல்லாயிரக்கணக்கான கணக்கீடுகளை விரை வாக முடிக்கும் சூப்பர் கணினி மற்றும் குவாண்டம் கணினி. முதல் இரண்டு வகையிலும் பைனரி எனப்படும் 0.1 நிலைகள் பயன்படுத்தப்படுகிறது. குவாண்டம் கணினியில் குவா பிட் எனப்படும் அணு உள்துகள்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம்.இவை சீரோ டிகிரிக்கும் கீழ் வெப்ப நிலை அல்லது மிகு வெற்றிடக் கலன்களில் மட்டுமே செயல்படுமாம். சீன அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜியான் வெய் பான் குழுவினர் 66குவா பிட்களைக் கொண்ட குவாண்டம் கணினியை உருவாக்கியுள்ளனர். இதுவரை 50 குவா பிட்கள் கொண்ட கணினிகளே இருந்தன. இப்போது உருவாக்கப்பட்டுள்ள கணினிக்கு சுச்சோன்குவி (Zuchongzhi) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சூப்பர் கணினிகள் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் மிகச் சிறிய அளவில் சிக்கலான மாதிரிகள் ஆய்வுப் பணிகளை முடிக்கிறதாம்.  

மருந்துகளின் கலவைகள் அவை ஒன்றுக்கொன்று புரியும் வினை ஆகியவற்றை குவாண்டம் கணினிகள் மூலம் ஆய்வு செய்ய முடியுமாம். வழக்கமான முறையில் இது சோதனை/தவறுகள் என்கிற முறையிலேயே செய்யப்பட்டு வந்தன. அதற்கு அதிக செலவு ஆவதோடு ஆபத்துகளும் இருந்தன. வேதியியல் துறையில் மூலக்கூறுகளை திறனுடன் ஆய்வு செய்யவும் இது அதிக அளவில் உதவுமாம். மறைமுகமாக தகவல்களை அனுப்பும் கிரப்டோகிராபியை கட்டுடைக்க இது பயன்படலாம் என்பது ஒரு எதிர்மறை பயன்.  மேலும் இவற்றில் தரவுகளை சில மைக்ரோ செகண்டு கள் மட்டுமே வைத்திருக்க முடியும்.நீண்ட நேரம் வைத்தி ருக்கும் குவாரம் எனும் கணினிகளை கட்டமைக்கும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம்.  குவாண்டம் கணினிகள் அமைக்க சூப்பர் கணினிகளை விட பன்மடங்கு செலவாகுமாம். ஒரு சூப்பர் கணினி அமைக்க $100 மில்லியன்  முதல் $300 மில்லியன் வரை செலவாகும்.அதே சமயத்தில் ஒரு குவாண்டம் கணினிக்கு பில்லியன் கணக்கில் செலவாகும்.