சென்னை, ஜூலை 10- மதுரை மாவட்ட புதிய காவல் கண்கா ணிப்பாளராக சுஜித் குமார், மதுரை மாநகர புதிய சட்ட ஒழுங்கு துணை ஆணையராக சிவ பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம், ஜூலை 10- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாநிலத் துணைத் தலைவரும் கன்னியா குமரி மாவட்டச் செயலாளருமான மலைவிலைபாசி, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் உஷா பாசி ஆகியோரை அவமரியாதையாகப் அடித்து பொய் வழக்கு போட்ட கன்னியாகுமரி மாவட்டம் வட சேரி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும். பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட் டம் கமுதியில் கண்டன இயக்கம் நடைபெற்றது மாரி முத்து, ராமர், சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.முத்துவிஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூரில் மாவட்டச் செயலா ளர் கணேசன் மாவட்டத் துணைச்செயலாளர் வி.முரு கன் ஆகியோர் தலைமையிலும் சாயல்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலா ளர் தங்கசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மயில்வாகனன், கட்சி தாலுகா செயலா ளர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் என். கலையரசன், தாலுகா தலை வர் என்.வெங்கடேஷ், சந்திரன், சிஐடியு மாவட்டத் தலைவர் அய்யாதுரை, துணைத் தலைவர் ஆர்.குருவேல், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செய லாளர் கண்ணகி, சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.