திருப்பூர், நவ.14- உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகு தியில் ரூ.4.13 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வியாழனன்று துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பகுதிகளில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் தார் சாலை, கான்கிரீட் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் திருமூர்த்தி அணை தளி வாய்க்காலை நீராதரமாகக் கொண்ட பகுதிகளுக்கு கற்காரை குழுாய்களுக்கு பதிலாக நெகிழி குழாய்களாக மாற்றும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு, உடுமலைப்பேட்டை வருவாய் கேட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பி னர் க.ஈஸ்வரசாமி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத்த லைவர் இல.பத்மநாபன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.