districts

img

24 மணி நேரத்தில் புதிய மின் இணைப்பு

பொள்ளாச்சி, ஜன.22- புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப் பம் செய்பவர்களுக்கு, 24 மணி நேரத்தில் இணைப்பு வழங்கப்படும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கப்பளாங்கரை ஊராட்சி  பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யம் சார்பில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் 212 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத் தார். இந்நிகழ்வினை, சனியன்று கப்பளாங் கரை கிராமத்தில் தமிழக  மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு திட்டத்தின் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதன்பின், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகை யில், தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மின் விநியோக கட்ட மைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைப் பதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 73  துணை மின்நிலையங்களுக்கு  மட்டும் இடம் தேர்வு செய்ய வேண்டிய பணிகள் மீத முள்ள நிலையில், விரைவில் இந்த பணிகள் நிறைவடையும். இதன்பின்னர், அடுத்த ஆண்டுகளில் 95 துணை மின் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப் படும், என்றார். புதிதாக மின் இணைப்புகள் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 24 மணி  நேரத்தில் மின்சார இணைப்பு வழங்க நட வடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக முதல் வர் அறிவித்த “ஒரு லட்சம் விவசாயி களுக்கு இலவச மின்சாரம்” வழங்கும்  பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 32 ஆயிரம்  பயனாளிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்து. மீதமுள்ள 45 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகி றது. மேற்கண்ட பணிகள் நிறைவடைந்த வுடன், மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் விவ சாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் பூர்த்தி செய்யப்படும், என்று உறுதி யளித்தார். மேலும், 4 ஆயிரம் மெகாவாட் சூரிய  ஒளி மின் உற்பத்திக்கான மின் உற்பத்தி  பூங்கா அமைக்க, ஒவ்வொரு மாவட்டங் களிலும் இடம் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சி யர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற் கான பணிகள் முடிந்தவுடன் அனைத்து மாவட்டங்களில் மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்பட்டு, மின்தடை இல்லாத மாநி லமாக தமிழகம் உருவாக்கப்படும் என் றார்.