districts

img

புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு

பள்ளிபாளையம், மே 11- ரூ.2.91 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்ட வெண் ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத் தில் ரூ.2.91 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவ லகக் கட்டடத்தினை காணொளி காட்சி  மூலம்  முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார். இதைத்தொடர்ந்து வெண்ணந்தூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச் சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர்  ஸ்ரேயா பி.சிங், மாநிலங்களவை உறுப்பினர்  கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர்  கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இரண்டு ஆண்டு நிறைவு செய்துள் ளதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் திட்டங் களை தொகுத்து “ஈடில்லா ஆட்சி ஈராண்டே  சாட்சி” என்ற‌ தலைப்பிலான சாதனை மலர்  வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  செயற்பொறியாளர் குமார்,  ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் தங்கம்மாள் (வெண்ணந்தூர்), கே.பி.ஜெகநாதன் (ராசி புரம்), மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.