districts

நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்குத்தான் செல்வ பெருந்தகை விமர்சனம்

கோவை, ஜூன் 15- நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம் பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும் தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் செல்வ பெருந்தகை குற்றம்சாட்டினார். 

கோவையில் நடைபெறும் திமுக முப்பெ ரும் விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இது  ஒரு மகிழ்ச்சியான தருணம் எனவும் முதல மைச்சரின் உழைப்புக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய அங்கீகாரம். ஒருபோதும் தமிழ் மண் ணில் பாசிசமும் பாஜகவும் காலூன்ற முடி யாது என கோவை வந்த ராகுல்காந்தி  கூறியதை சுட்டிக்காட்டியதுடன், அதன் அடிப்ப டையில் 40க்கு 40 வெற்றியை பெற்று இருக்கி றோம். இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு காரணம் முழுக்க முழுக்க மக்கள் பலமும்  மூன்று ஆண்டு ஆட்சியில் கிடைத்த நலத்திட் டங்கள் தான். திமுக கூட்டணியில் உரிய மரி யாதை அளிக்கப்படுகிறது. நாங்களெல்லாம்  தோழமையாக இருக்கிறோம், உண்மையாக  இருக்கிறோம், கால் நூற்றாண்டுக்கு மேல்  தமிழ்நாட்டில் நல்லாட்சியை கொடுப்போம்.

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,

நீட் தேர்வை பாஜக அரசு திட்டமிட்டு ஏழை  எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்க ளுக்கு எதிராக நடத்தி வருகிறது. இதில், ஆள்  மாறாட்டம் இருக்கிறது, பணபலம் இருக்கி றது, ஆகவே, தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம்  தமிழ் குழந்தைகளை தொடர்ந்து மரணத் திற்கு ஆளாக்க வேண்டாம் என தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வில்  தொடர்ந்து முறைகேடு தான். நீட்டை  கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற் கும் முறைகேடு செய்வதற்கும்தான். இந்த நீட்  தேர்வினால் பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவ னங்கள் பணம் சம்பாதிக்கின்றது என்றார்.